பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி - Click Here For Download
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு,
புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள்
வழங்கப்பட உள்ளது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, தேர்வுத்துறை
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு
கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.
சென்னைப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம்
ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன்
பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய நிலை இருப்பதாகக்
கூறினார்.
ரூ. 3500 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக
ரூ. 3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி வசூல்: பொதுமக்கள் அதிருப்தி
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை
(எல்.ஐ.சி.) தொடர்ந்து, அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கும் ஜனவரி
மாதம் முதல் சேவை வரி வசூல் செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர்கள் இன்றுமுதல் மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிப்
பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மூன்று நாள்கள் மறியல்
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
150 தமிழ் நூல்கள் இன்று வெளியீடு
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 150 அரிய தமிழ் நூல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளன.
பிரதேச ராணுவ படைக்கான ஆள் சேர்ப்பு முகாம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வந்து குவிந்தனர்
திருச்சியில்,
பிரதேச ராணுவ படைக்கான ஆள்சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதற்கான
உடல் திறன் தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான
இளைஞர்கள் வந்து குவிந்தனர்.
B.Ed., & M.Ed., படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: அமைச்சர் பழனியப்பன்
சட்டசபையில்
இன்று உறுப்பினர்கள் க.அன்பழகன், டில்லிபாபு ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு
பதில் அளித்து உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:–
மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஊதிய
உயர்வு, வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள் (பிப்ரவரி 25) முதல் நான்கு நாள்கள்
தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள்
அறிவித்திருந்தனர்.
தனியார் பள்ளிகள் வசூலித்த ரூ.7 கோடி கூடுதல் கட்டணம்: பெற்றோருக்கு திரும்ப கிடைக்குமா?
தமிழ்நாட்டில்
உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் கமிட்டி
அமைக்கப்பட்டு குழு பரிந்துரைத்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டது.
மேலாண்மை படிப்புக்கு ஐஐடி அழைப்பு
எங்கெங்கும் இணைய வசதி: கூகுளின் பிரமாண்ட திட்டம்!
உலக அளவில் இணைய வசதி எட்டாதவர்கள், 5
பில்லியன் பேர் இருக்கின்றனர். இதற்கு, பல இடங்களில் இணைய சமிக்ஞைகள் எட்ட
முடியாமல் இருப்பது தான் காரணம். எனவே, வருமானத்திற்கு இணையத்தையே
நம்பியிருக்கும் தேடு பொறி இயந்திர நிறுவனமான கூகுள், எல்லோருக்கும் இணையம்
எட்ட வேண்டும் என்பதற்காக, 'புராஜக்ட் லூன்' என்ற திட்டத்தை, 2013ல்
அறிவித்தது.
பேட்டரி டூவீலர் தயாரிப்பில் மோசடி; பொறியியல் மாணவர் மீது வழக்கு பதிவு
சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் அனூப்
நிஷாந்த். இவர், சிவகங்கை எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் அளித்த புகார்:
சென்னையில், ’மேக்ஸ் ஸ்பீடு டிசைன்ஸ்’ நிறுவனம் மூலம் புகை வெளியிடாத
டூவீலர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். அப்போது மானாமதுரையைச்
சேர்ந்த இன்ஜினியரிங் மாணவர் மணிகண்டன் அறிமுகமானார்; பகுதி நேர பணியில்
சேர்ந்தார்.
விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை ..! மதுரையில் நிரந்தர மையம் அமையுமா
மதுரை
மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்
திருத்தும் பணிக்கு நிரந்தர மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?nநீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால்
வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி,
மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த
மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை
பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு
நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங்
ரத்தோர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 65.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 65.5 லட்சம் குழந்தைகளுக்கு
போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்: ஆபத்தில் அரசு ஆவணங்கள்
பெட்ரோலிய அமைச்சகத்தில், ரகசிய ஆவணங்கள்
காணாமல் போன நிலையில், தமிழகத்திலும், ஏற்கனவே ஆவணங்கள் காணாமல் போய், 30
ஆண்டுகளாக தேடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காந்தி தோற்றத்தில் சுற்றுலா பயணி
மொட்டை மாடியில் பட்டையை கிளப்பும் மண்ணில்லா விவசாயம்
தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், 'ரியல் எஸ்டேட்'காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.
"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'
அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள்,
அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்
சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இந்தியருக்கு வேதியியல் விருது
அமெரிக்கா
வாழ் இந்தியருக்கு வேதியலுக்கான விருதை அமெரிக்கா வழங்கி
கவுரவித்துள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் புர்னென்டு
தாஸ் குப்தா, இவர் டெக்ஸாஸ் பல்கலை.,யில் வேதியியல் பேராசிரியராக
பணியாற்றிவருகிறார்.
ஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை: 5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு
அரசாணை இருந்தும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல் காரணமாக பணி மேம்பாடு பெற முடியாமல் 5 ஆண்டுகளுக்கும்
மேலாக பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல்
கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்காத ஒன்று...!
நகரத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் பல வாய்ப்புகள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஒரு குறைபாடு நீண்டகாலமாக உண்டு.
மாணவர்கள் சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.
தேர்வை சுமையாக கருதாமல் வெற்றிக்கு இலக்காக மனதில் கொள்ள வேண்டும் என ரேடியோ மூலம் பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மன்கிபாத் என்ற நிகழ்ச்சி வாயிலாக ரேடியோ மூலம் பிரதமர் நரேந்திர மோடி
மாதம் தோறும் பேசி வருகிறார்.
தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - Karunai Doss
தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது
ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.
என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!
1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது?






