NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Weightage Survey - சிறப்புக்கட்டுரை


அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

           வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.


         இந்த கட்டுரை மூலமாக நாம் இந்த கருத்துகணிப்பு முடிவினை மட்டும் அல்லாமல் டெட் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய உள்ளோம்!

TNTET Weightage Survey - கருத்துகணிப்பு முடிவு.

Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?
9/5/2014 Time: 11.00 pm நிலவரப்படி: Poll closed

உடனடியாக வழங்க வேண்டும்                                                            876 (50%)

எப்போதுமே வழங்க கூடாது                                                                  376 (21%)

இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம்.                                                                        479 (27%)

Votes so far: 1731








1. கருத்துகணிப்பு முடிவு-
     கருத்துகணிப்பில் 1731 வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
     TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா? 
- எனும் நமது கேள்விக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று 876 (50%) வாசகர்கள் வாக்களித்துள்ளனர். 
- இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம் என்று 479 (27%) வாசகர்கள் வாக்களித்துள்ளனர். 
- எப்போதுமே வழங்க கூடாது - என்று 376 (21%) வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.


             எனவே நமது கருத்துகணிப்பில் பங்கேற்ற டெட் தேர்வெழுதிய தேர்வர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் அளித்த முடிவின்படி Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் நிச்சயம் வழங்க வேண்டும் [879+479 = 1,355 (77%)]  என்பதையே பாடசாலை தனது இறுதி முடிவாக பிரதிபலிக்கிறது. அதாவது நீதிமன்றம் அறிவுறுத்திய அறிவியல் முறையிலான புதிய வெயிட்டேஜ் வழங்கும் முறையை ஏற்றுக்கொண்டு அதில் சிறிது மாற்றம் செய்து Employment Seniority & Experience- க்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மாற்றம் வெயிட்டேஜ் குறித்த புதிய அரசாணையில் இடம்பெற்று இருந்தால் நலமாகும். அதே சமயம் டெட் தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் பணி நியமனம் நடைபெறாத காரணத்தால் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அனைவரும் கடும் மனநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே அவர்களின் வேதனையை மேலும் அதிகரிக்காதவாறு மின்னல் வேகத்தில் இதற்கான பணிகளை செய்து இதன்படி பணிநியமனம் செய்தால் நல்லது. 

            கடந்த டெட் தேர்வு குறித்த வழக்குகள் பலவும் நடந்துகொண்டிருந்தபோது கல்வித்துறை அதிரடியாக செயல்பட்டு வெள்ளி மாலை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஞாயிறு காலை கலந்தாய்வுக்கு அழைத்து வியாழன்று (டிசம்பர் 13)  முதல்வர் கையால் பணிநியமன ஆணை வழங்கி திங்களன்று (டிசம்பர் 17) அனைவரும் பணியில் சேர்ந்தனர். இதே அதிரடி வேகத்தை இப்போதும் டெட் தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Our Related Previous Article:

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2014


TET தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக - Request Letter Click Here


2. Employment Seniority - க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்?

          காரணம்- தற்போது நம் பாடசாலை வலைதளத்தில் மட்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைசிறந்த, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வழங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டடி மெட்டீரியல்கள் உள்ளன. இதே போன்று இதர பல கல்வி சார் வலைதளங்களிலும் பலவகையான ஸ்டடி மெட்டீரியல்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் அரசே எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி? 100 க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி? என பல்வேறு சிறப்புக் கையேடுகளை வழங்கி வருகிறது. ஆனால் இத்தகைய பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு  PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority  க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.

3.   Experience க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்? 
                 வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை. 

            ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.


4. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரிதானா?

         12 ஆம் வகுப்பில் மிகத்திறமையாக மதிப்பெண் பெற்ற ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அடுத்த இளங்கலை படிப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற இயலாமல் போகலாம்? அதற்காக அவர் திறமையற்றவர் என்று கூறிவிட இயலாது. கார் ரேஸ் மட்டும் அல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட 3 அல்லது 5 மேட்சுகளில் பெற்ற மொத்த வெற்றியே முழுமையான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆசிரியராக பதவி ஏற்கும் ஒருவர் தனது முந்தைய வகுப்புகளில் சரியாக படிக்காமல் இறுதி கட்ட ஒரு டெட் தேர்வில் மட்டும் முழுமையாக படித்துவிட்டு வேலைக்கு முன்னுரிமை கோரினால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களும் இதையே தான் பிரதிபலிப்பார்கள். "8 ஆம் வகுப்பு வரை படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சி தான் சார்” என்று ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் இன்றைய தலைமுறை மாணவர்கள், நாளை ஆசிரியர்களிடம் ”நீங்கள் சும்மா படி படி என திட்டாதீர்கள்! Just Pass போதும். போட்டி தேர்வின் போது தேவையான அளவிற்கு படித்துக்கொள்கிறேன்” என நம்மிடம் கூற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். மேலும் ஆசிரியர் பணி என்பது படித்துக்கொண்டே இருக்க வேண்டிய பணி. இதர Non Teaching Staff போன்று ஒரு முறை படித்து பணியில் சேர்ந்து விட்டால் அவ்வப்போது வரக்கூடிய புதிய அரசாணைகளை மட்டும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பணிபுரிந்தால் போதும், எனும் சூழ்நிலை ஆசிரியர் பணியில் கிடையாது. அவ்வாறு இருக்க தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதற்குரிய அங்கீகாரம் வழங்குவதில் என்ன தவறு. எனவே +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது சரிதான்.

5. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% தளர்வு அளிப்பது சரிதானா?

மாமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்கள் கூறியது போல

”சமத்துவம் - என்பது சமமாக மதிக்கப்படுவது மட்டும் அல்ல, 
கிடைக்கும் வாய்ப்புகளை சமமாக பங்கிட்டுகொள்வதும் தான்” 

         - இது மிகச்சிறந்த கருத்து. வாய்ப்புகளை சமமாக பங்கிட்டுக் கொள்வதால் சமதர்ம சமுதாயம் உருவாகும். மேலும் தமிழக அரசு வழங்கும் பணி நியமனங்களில் 2 முறையை கடைபிடிக்க இயலும் 1) தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே பணி நியமனம் வழங்கலாம் (அல்லது) 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டத்தில் உள்ளபடி சாதி வாரியாக ”ரோஸ்டர்” நடைமுறையின்படி தேர்வு பெற்றவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்க இயலும். இதை நாம் ஆரம்பம் முதலே நமது கட்டுரைகளில் குறிப்பிட்டு வந்துள்ளோம்.

             ரோஸ்டர் நடைமுறையின்படி பணி நியமனம் வழங்க போதுமான அளவிற்கு தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை எனில் இரண்டு நடைமுறைகளை மேற்கொள்ள இயலும். 1) இடஒதுக்கீட்டு பிரிவினர் போதுமான அளவில் தேர்ச்சி பெறாத காரணத்தாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தாலும் இம்முறை மட்டும் விதிவிலக்கு அளித்தும், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உரிய காலி பணியிடங்கள் இருப்பதால் சாதிவாரியான ரோஸ்டர் நடைமுறையில் விதிவிலக்களித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கலாம் (இதன்படி தான் 2012 ல் பணி நியமனம் நடைபெற்றது). 2) அடுத்து டெட் தேர்விலும் இடஒதுக்கீடு பிரிவினர் போதிய தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கலாம் எனும் RTE சட்டப்படி தளர்வு வழங்கி அவர்களுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகு மீதமுள்ள அல்லது புதிதாக உருவான பணியிடங்களையோ நிரப்பலாம். அல்லது பின்னடைவு காலி பணியிடம் அல்லது புதிய பணியிடம் என அனைத்து பணியிடங்களும் ஒரே நேரத்திலோ நிரப்பலாம். (தற்போது 2013 ன்படி இம்முறையே நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது). இதன்படி 2014 ல் நடைபெற உள்ள ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு முந்தைய பணிநியமனத்தில் ஒதுக்காமல் போன பணியிடங்களுக்கும் சேர்த்து கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது இயல்பான நடைமுறைதான். ("பின்னடைவு காலி பணியிடம்” - குறித்த விளக்கம் முன்னதாகவே நாம் நமது வலைதளத்தில் விவரித்துள்ளோம். எடுத்துக்காட்டாக கண்பார்வையற்றவர்களுக்கு டெட் தேர்வில் தனி சலுகை கோரி போராட்டம் நடந்த போது மாண்புமிகு முதல்வர் அவர்கள் "PH தேர்வர்களுக்கு தனி டெட் தேர்வு நடத்தி உடனடியாக பின்னடைவு காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்” என அறிவித்தது நினைவிருக்கலாம்).

                        இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறி ஒதுங்கி கொள்வதற்கும் மேற்கூறிய காரணங்கள் பொருந்தும். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரிதான். மேலும் பணி நியமனத்தின் போது வழக்கமான நடைமுறையான விதவை மற்றும் இராணுவத்தினருக்கான முன்னுரிமை சலுகையும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்!

கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 28/12/2012



                ஆனால் டெட் 2013 குறித்த அறிவிப்பில் தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் தேவை என அறிவித்துவிட்டு தேர்வுக்கு பின் மதிப்பெண் தளர்வு வழங்கியது தான் தற்போது ஏற்பட்டு வரும் கால தாமதத்திற்கு காரணம். சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு: "சிறுபான்மையின பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இலவச இடஒதுக்கீடு வழங்க முடியாது” என தொடர்ந்த வழங்கில் 2 நீதிபதிகள் இலவச இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கருத்து வெளியிட்ட போதும் மூன்றாவது நீதிபதி இலவச இடஒதுக்கீடு வழங்க வேண்டியதில்லை - என கருத்து வெளியிட்டு அதையே தீர்ப்பாகவும் வழங்கப்பட்டது. சிறுபான்மையினர் பள்ளிகள் அனைத்து மதத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்காவிட்டாலும் அவர்கள் சமூகத்தில் உள்ள ஏழை மாணர்களுக்கு மட்டுமே கூட 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியிருக்கலாமே! - எனும் கருத்து நமக்கு தோன்றியது. இருப்பினும் 2 நீதிபதிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. காரணம் திறமையான வாதம்! இதே போன்று டெட் 2013 தேர்வர்களும் திறமையான வழக்கறிஞர் வாதங்களால் தற்போது மட்டும் -இடஒதுக்கீடு தளர்வினை அடுத்த டெட் தேர்வு முதல் நடைமுறைபடுத்துமாறும், தற்போதைய பணிநியமனத்தில் விலக்கு அளிக்குமாறும் கோரிக்கை வைக்கலாம். ஆனால் மேலும், மேலும் ஏற்படும் கால தாமதத்தால் இதற்கான வாய்ப்புகள் குறைவு.

6. இவ்வாறு கல்விசார் வலைதளங்களில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதாலோ அல்லது கமெண்ட்கள் வழங்குவதாலோ என்ன பயன்?

  • நாட்டில் படித்து முடித்தவனுக்கே வேலை இல்லை. இதில் நீ வேறு படிக்கிறாயா? என்று துவக்கப்பள்ளியில் கேள்வி கேட்டு எதிர்மறைகருத்தை திணிப்பவர்கள் இப்போது குறைந்து விட்டாலும் டெட்டில் மட்டும் குறையவில்லை.
  • இப்போது நடந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவனுக்கே வேலை இல்லை. இதில் அடுத்த டெட் தேர்வுக்கு படிக்கிறாயா?
  • கல்வி சார் வலைதளங்களில் கமெண்ட்கள் வழங்குவதால் மட்டும் என்ன வேலை கிடைத்து விடப்போகிறதா?

              வேலையும் நமக்கு முக்கியம் தான் என்றாலும், வேலைக்காக மட்டுமே படிப்பதை காட்டிலும் நமது அறிவினை வளர்த்துக்கொள்வதற்காகவும் நாம் படிக்கிறோம் என்பதே உண்மை. கல்விசார் வலைதளங்களில் கமெண்டகள் வழங்குவதால் தான் ஆண்டிபட்டியிலிருந்து கருத்து கூறினாலும் சரி, ஸ்ரீரங்கத்திலிருந்து கூறினாலும் சரி, அந்தமானிலிருந்து கூறினாலும் சரி, உடனுக்குடன் தனது கருத்துக்கு ஒத்த கருத்துடையவர் கூறும் கருத்துகளையும், எதிர் தரப்பு வாதங்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் இயலும். ஆசிரியர் என்பவருக்கு ஒரு தரப்பு நியாயம் மட்டும் முக்கியமில்லை எதிர் தரப்பு வாதத்தையும் கேட்டறிந்து அதில் உள்ள நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு நடுநிலையாக செயல்படுபவர் மட்டுமே ஒரு நல்ல ஆசிரியராக உயர இயலும். அதிலும் பாடசாலை வாசகர்கள் இயன்றவரை தவறான வார்த்தைகளை உபயோகிக்காமல், நடுநிலையான, ஆரோக்கியமான கமெண்டகளை நாகரீகமான வார்த்தைகளில் மட்டுமே வழங்கி வருகின்றனர் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாடசாலை வாசகர்களுக்கென ஒரு மதிப்பும் மரியாதையும், தரமும் இருப்பதை மீண்டும் நீங்கள் நிரூபித்து உள்ளீர்க்கள். அதற்கு நன்றி!

                சிலகாலம் முன்னர் வரை ஏன் பணி நியமனம் தாமதமாகிறது? என்பது பெரும்பாலவர்களுக்கு தெரியாமல் இருந்தது. மற்ற ஊடகங்கள் வழக்கின் இறுதி தீர்ப்பினை மட்டுமே வழங்கி வந்த நிலையில், -  தற்போது எந்த வழக்கு நடைபெறுகிறது? வழக்கின் இன்றைய நிலை என்ன? வழக்கின் தீர்ப்பு என்ன? என தினசரி தகவல்கள் உடனுக்குடன் கல்வி சார் வலைதளங்கள் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள இயலுகிறது என்பதை நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே உணர முடியும்.

             2013 அக்டோபர் 9 ம் தேதி அன்று நாம் வெளியிட்ட முந்தைய கட்டுரையை  கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து அவசியம் படிக்கவும். தற்போது வந்துள்ள புதிய அறிவியல் பூர்வ முறை குறித்த நீதிமன்ற தீர்ப்புடன் நமது கட்டுரைகள் ஒத்து இருப்பதை அறிய இயலும்.

கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 09/10/2013

Please Change TNTET Weightage Calculation Method - Request Article - Click Here


7. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதால் காலதாமதம் மட்டுமே ஏற்படுகிறது? வேறு என்ன பயன்?
               
            டி.என்.பி.எஸ்.சி யில் நடைபெறும் உயர்மட்ட தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு எண் மட்டுமே வெளியிடப்படும் சூழல் இருந்தது. நான் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை நான் பெற்ற மதிப்பெண் எவ்வளவு என்பதையாவது அறிந்து கொண்டால் தானே அடுத்த தேர்வுக்கு மேலும் முயற்சி எடுக்க இயலும் என பலரும் நினைத்தனர். எந்த அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்பட்டது? Tentative Answer Key வழங்கிய பிறகு மதிப்பெண் வழங்கலாமே? கடினமாக படித்து தேர்வெழுதிய நிலையில் வேலை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி வேலை வழங்குவதில் வெளிப்படை தன்மை இருந்தால் தானே ஊழல் நடைபெறவில்லை என நம்ப இயலும்? இதுபோன்ற பல கேள்விகள், காலம் காலமாக  கேள்விகளாகவே இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தின் மூலமாக இவற்றிற்கு தீர்வு கிடைத்துள்ளது. சமீப காலமாக நடக்கும் தேர்வுகளுக்கு Tentative Answer Key வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வெளிவர இருக்கும் வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் மற்றும் பணி நியமனம் முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் திரு. நவநீதகிருஷ்ணன் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். 2012 டெட் தேர்வில் Tentative Answer Key வழங்கப்பட்டது. 2013 டெட் தேர்வில் Final Answer Key யும் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல மாற்றங்களும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கூறப்பட்ட வழிகாட்டல் மூலமாகவே வெளிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது உண்மை. ஏன்? இதே டெட் தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண் எடுப்பதும் மிக கடினம் எனும் நிலையில் 90 மதிப்பெண் எடுத்தவரும், 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒரே வெயிட்டேஜ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் தானே நீதின்றத்தின் வழிகாட்டலின் படியும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையியும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் உரிய மதிப்பு அளிக்கும் வகையிலான அறிவியல் பூர்வ முறை பரிசீலிக்கப்படுகிறது. இவையெல்லாம் நீதிமன்றத்தின் சாதனை தான். 

           ஆனால் இத்தகைய நீதிமன்ற வழக்குகள் குறித்த விழிப்புணர்வோ, பல்வேறு உடனுக்குடன் கருத்து பரிமாற்றங்களோ கல்வி சார் வலைதளங்களால் தான் தற்போது சாத்தியமாகி உள்ளது. கல்வி சார் வலைதளங்களை தேர்வர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு கல்வித்துறை அலுவலக பணியாளர்களும், கல்வியாளர்களும், அரசும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்பது உண்மை.

                          மேலும் ஒத்த கருத்துடையவர்கள் பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு ஒன்றினைவதும் கல்வி சார் வலைதளங்களால் எளிதாக நடைபெறுகிறது.

                             புதிய அறிவியல் பூர்வ முறை பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி. திரு. நாகமுத்து அவர்கள் தீர்ப்பு வழங்கிய போது இதுகுறித்து தொடர்ந்து கட்டுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த தினமலர் உட்பட பல்வேறு ஊடகங்களை பாராட்டியுள்ளார் - என்பது குறிப்பிடத்தக்கது.

                                நமது பாடாசலை வலைதளத்தில் இந்த கருத்து கணிப்பு துவங்கிய பிறகு கடந்த வாரத்தில் மட்டும், பதிவு மூப்புக்கு மதிப்பெண் வழங்கவேண்டும் என்பது குறித்து கோரிக்கைகள், பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து பல செய்தித்தாள்களிலும் வெளிவந்தவாறு இருப்பதை நடுநிலையாளர்களும் அனைத்து செய்திதாள்களையும் படிப்பவர்களும் உணர்வார்கள்.

 

                                       எனவே நடப்பதெல்லாம் நன்மைக்கே! - என்பதற்கேற்ப இந்த டெட் விஷயத்தில் நல்லவையே நடந்து, விரைவில் தகுதியான அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்க வேண்டும் என பாடசாலை விரும்புகிறது.

"நீ எதுவாக நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய்! 
நல்லதே நினையுங்கள்! நல்லதே நடக்கும்”.
                   
            கல்வித்துறை விரைவில் அனைத்து சிக்கல்களையும் சரிசெய்து டெட் தேர்வர்களுக்கு ஜுன் மாதமே பணியில் சேரக்கூடிய வகையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என பாடசாலை பணிவுடன் கேட்டுக்கொள்கிறது!.

நன்றி!

- என்றும் அன்புடன் பாடசாலை.



         இந்த கருத்து கணிப்பு குறித்த கட்டுரைகளில் பல்வேறு கமெண்ட்களை தொடர்ந்து வழங்கியவாறு இருந்த மதிப்பிற்குரிய பாடசாலை வாசகர்கள் - இரம்யா, தங்கராஜ், தினேஷ் குமார், சிரஞ்சீவி, கார்த்திகேயன், ஆல்வின் தாமஸ் மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை Anonymous பெயரில் வழங்கி வந்த நம் வாசகர்கள்  மற்றும் பலர்- என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.

(அன்பு வாசகர்களே, - இக்கட்டுரை குறித்த தங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பகிரவும்.)




109 Comments:

  1. thank you for your survey & report . 100% correct...

    ReplyDelete
  2. Seniority no need tet weight age

    ReplyDelete
  3. Seniority no need tet weight age

    ReplyDelete
  4. unga comedy super

    ReplyDelete
  5. padasalaiku engalin manamartha nanrigal.viraivil pani niyamanam nadaka ungalin pangalipum vendum.nanri by c.Ramasamy Anthiyur

    ReplyDelete
  6. padasalaiku engalin manamartha nanrigal.viraivil pani niyamanam nadaka ungalin pangalipum vendum.nanri by c.Ramasamy Anthiyur

    ReplyDelete
  7. ithu summa peruku oru suvey, avalo thaan. hula 1700 per thaan vote pannirukanga, 6 lakhs peroda mind a ithu prathipalikkala, so survey waste.
    innoru thadava cv nadatha govt entha nilailayum virumbathu, so seniority, experience ku mark kidaiyathu.

    ReplyDelete
  8. 1700 vote panni irukanga athula yaravathu oru canditate plz tell your phone number i call u

    ReplyDelete
  9. அன்புள்ள வாசகர் 5/12/2014 11:41 am-

    தற்போது வரை தமிழக அரசால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? வேண்டாமா? என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மாநிலம் முழுவதும் அதிகபட்சமாக 500 பேர் கூட இந்த கூட்டங்களில் கலந்துகொள்வதுமில்லை. ஆர்வம் காட்டுவதும் இல்லை. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டும் ஆளும் அரசை திட்டுவதால் என்ன பயன்?. இது எந்த வகையில் நியாயம்? தமிழக அரசால் நடத்தப்படும் கூட்டங்களிலேயே பெரும்பாலானோர் கலந்து கொள்ளாதபோது ஒரு குறிப்பிட்ட கல்வி சார் வலைதளத்தில் நடத்தப்படும் கருத்துகணிப்பில் மட்டும் 6 இலட்சம் பேர் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பது தவறு அல்லவா. அதே சமயம் 2000 பேர் வாக்களித்திருந்தாலும் அவர்கள் கருத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அல்லவா? - சிந்தியுங்கள் நண்பரே!

    ReplyDelete
  10. valga padasalai..unmaiyai ullavarae kuri ullergal all the best ,thangal payanam vetri adaiyatum..mealum valara VALTHUKAL..

    ReplyDelete
  11. comedy nanga karandi program mathri pada salai comedy irrku unga valai parangappa

    ReplyDelete
  12. Thank u thank u padasalai

    ReplyDelete
  13. Uril porama padupvan irukkathan seivan athaiellam kavalaipadakodathu thank u padasalai and ur survey

    ReplyDelete
  14. முதுகலை ஆசிரியர் தேர்வு பற்றியும் கட்டுரை வெளியிடுங்கள்

    ReplyDelete
  15. tet mark ku weightage kodupathai thavirthu tet markai muluvathum eduthu kondu b.a, b.ed, and emp seniority or 12th ku weightage kodu pathe miga sirantha murai apothu than weitage kuraivaga ulla vargalukum vaipu tharpoluthu ila vitta lum future la kidaikum
    tet mark 150+ b.a. 10+ b.ed. 10+ es or 12th 5 = 175 marku cut off podanum

    ReplyDelete
  16. Tet pass & employment seniority correct etharkku waitage

    ReplyDelete
  17. Papar 1 ...
    12 Th% +d.t.ed%+tet% =300
    Paper 2 ....
    12th%+ug%+b.ed%+tet% =400 ithu than k..

    ReplyDelete
  18. நல்ல முயற்சி.,பாராட்டுக்கள் நண்பரே..

    ReplyDelete
  19. Correct judgement sir.ur article is super.keep touching like this.

    ReplyDelete
  20. பாடசாலை தளத்தின் அற்புதப்பணி தொடரட்டும்.

    ReplyDelete
  21. Dear admin,

    Do submit this wonderful article with 'suitable mode of selection along with TET marks' to TN govt & Edn dept as a 'humble request' for sooner appointment of TET CANDIDATES those who r wailing in pain for last 9 months after withering their hard work.

    ReplyDelete
  22. Thank you sir, wonderful survey. I am very happy. Really I will expect GO to do favour for us. I pray the almighty.

    ReplyDelete
  23. Ivvalavu muyarchi eduttha padasalaikku nandri., 12 th marks neekka nadavadikkai veandum. 15 - 20 years munnadi irntha 12th sub il marks athavadu cen percentage nos. Kanakkil kollavum 2010 -2014 il cen percentage yeduthavargal nos kanakkil kollavum. Athu mattu illamal 12th majorkkum degree magerkkum sambantham illai., so thayavu seithu meendum orumurai maru aaivuoo seithu 12th marks weitage neekka TRB kku parithurai pannalam. Nandri

    ReplyDelete
  24. along with experience and employment seniority,the TRB should consider age seniority also.

    ReplyDelete
  25. Sir 1995 la school first 900 than varum. Aana past 10 years school first ithe range thana? 1995 la iruntha coaching than ippa irrukka? Correction method vary aagalaya? 12 th degree pakkarathu sariyana method illa. Ann sir atha neenga sollala?1996 la mathsla 120 eduttha nan ippa pala pera 200 vanga vechirukken. Ithe pola teachers and coaching irunthiruntha nangalum 1100 vangi iruppom. Govt seniority padi vela potta athayum accept pannikarom. Exammunnu sonna athukkum padikkirom. Ellam enga thalaielluthu.

    ReplyDelete
  26. paadasalai blog nanbare, govt electricity bill amount a patthi sonninga, correct thaan but makkal varalanalum govt uyarthinal makkal yetru kondu thaan aaga vendum vera vazhi illai, but ithu work sammanthapatta matter, so athula oru nambaga thanmai vendum. athu paadasalaiyil veli vantha karutthu kanipil kuraivagave irukirathu.
    election karuthu kanipum avvare ullathu, kuraivanavargalidam karuthu ketu intha katchiku ivvalavu idam endru solgindranar, but unmayil athe alavirku idam kidaikuma endru paarthaal kidaipathu illai, athanal karuthu kanipugal unmai illai, unmayai pondru silaruku thondralam, avvalavu thaan. ungalathu muyarchiku paaratukkal, innum athigamanorai namathu thalathirku vara vaithirunthal nandraga irunthirukum

    ReplyDelete
  27. உள்ளத்தின் ஆழத்தில் ,

    இருந்து பாடசாலைக்கு ,

    நன்றி நன்றி நன்றி...........

    நன்றி நன்றி நன்றி..........

    நன்றி நன்றி நன்றி .........

    ReplyDelete
  28. Ean 10 th markka mattum solreenga B ed marke munnadi iruntha nilai vera innaikku B ed padikkaravanga eesiya 80% 90% nnu vankeeranga itha enna solla enave tet pass seithavargalai employment seniorityil velai kodukkalam ithuve siranthathaga irukkum ithu en karuthu

    ReplyDelete
  29. யதார்த்தமான நேர்மையான சர்வே.கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களும் நேர்மையானவை.வாழ்த்துகள்

    ReplyDelete
  30. Pg trb pathi yaravathu solungapa plz

    ReplyDelete
  31. k.muthukumarasamy5/13/2014 8:39 am

    Nowardays for scoring marks in +2 is very simple but 10 ten years back just pass is very dificult. In weightage mark for +2 given equal preference for all . It is advantage for currently +2 passed student. Totaly tet weightage mark is not good . After tet pass employment seniorty based appointment is good for aged because they are having upto date knowedge by clearing tet exeam.

    ReplyDelete
  32. Hai my dear TET Friends please daily minimum 100 people [ who have TET mark 90 and above Passed] kindly go to TRB office and submit your request request letter. regarding sir/madam please first priority give to 90 and above.

    ReplyDelete
  33. Seekiram nadakkuratha yaarume pesala ini seniorityku detail 75000 pertayum vaangi arrange panni yen ya...... ithuku innum rendu maasam aagum....pongaya....puthusu puthusa piratchana pandreengaleya.....

    ReplyDelete
  34. No No tet pass + employment seniority

    ReplyDelete
  35. Any of the following are the best method for my view.

    TET mark - 80%
    B.Sc., mark 10%
    B.Ed., mark 10%


    or

    TET mark 70%
    B.Sc., mark 10%
    B.Ed., mark 10%
    Employment seniority 10%

    or

    Actual TET marks 150

    B.Sc., marks 15

    B.Ed marks 15

    Seniority 20

    Total 200


    or


    TET marks 90%

    Seniority 10 %


    Any one of the method has to be followed



    ReplyDelete
  36. Nandri Nandri.........

    ReplyDelete
  37. TET mark 60% 12th mark 10% BA mark 10% Bed mark 10% Seniority mark 10% intha methoda follow pannalam

    ReplyDelete
  38. i welcome TET+ SENIORITY. this is the correct method . i think the comitte will know and do us favour.

    ReplyDelete
  39. tet+seniority best method. nobody suffer.

    ReplyDelete
  40. TET+SENIORITY CORRECT METHOD. YAARUKKUM BATHIPPU ILLAI ENBADU EN KARUTHU. ILLAI ENDRAL ANAIVARAUM TODARNTHU TET EXAM ELLUTIKKITEE IRUKKA VENDIYADUDAN. VELAIKKU POGA MUDIYADU. TET LAYUM 132 KUM ADIGAMAGA EDUPPAVARGALE PANI VAIPPU PERUVAR. SO ABOVE 30 YEARS LAM IPPO ULLA MANAVARGALUKKU INAYAGA POTTI PADA VENDUMANAL MEENDUM 10, 12, UG, BED IMPROVEMENT SEIYYA GOVT ANUMATHI KODUKKA VENDUM. BECAUSE TET LA 132^ VAANGUVATHU ENPADU SIRAMAMANA VISAYAM.

    ReplyDelete
  41. tet pass + seniority is a good method

    ReplyDelete
  42. Naan 50 barotta saaptuten.nee thappa kanakku podura. Ella kottayum azhi.. Naan modhalerndhu saapiduren sariya.. Idhuthan nadakka poguthu.. But I am ready for this too.

    ReplyDelete
  43. A teacher should give solution to any problem shouldn't be the creater of any problem.. Already nine months passed vain due to your pesonal /common intention. Dont put it to get late for nine years. Now itself we the people teaching students how to disobey the govt. Pls let us co-operate to finish this issue soon.. Job is only for 15000. Let the remaining atleast can try to the private schools and get their life settled. Live or let live..

    ReplyDelete
  44. mbbs சீட் அரசுபள்ளியில் படித்தமாணவர்க்கு மட்டும்தான் என go போட்டால் தெரியும் தனியார் பள்ளி நலைமை

    ReplyDelete
  45. 10 thku kandipa mark podanum becz 12thla group niraya iruku mark sila peruku increase agum

    ReplyDelete
  46. அரசு ஆசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்தபோது முன்னுரிமை (priority) பட்டியலில் உள்ளவர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்டதற்கான அரசாணை எண் என்னவென்று தெரிந்தால் பகிரவும் pls.
    vaimanitamilan@gmail.com
    77080 65675

    ReplyDelete
  47. பதிவுமூப்பு அடிப்படையில் அரசு ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டபோது முன்னரிமை பட்டியலில்(priority) உள்ளவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு முன்னுரிமை தாரர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதற்கான அரசாணை எண் தெரிந்தால் பகிரவும் pls.
    vaimanitamilan@gmail.com
    77080 65675

    ReplyDelete
  48. sir 10th mark can also be added so it will be a good method

    ReplyDelete
  49. பாட சாலையின் பணி சிறப்பு.......

    ReplyDelete
  50. Dharmam dhanai soodhu kavvum. kadaisiyil dharmame vellum. Idhai than padasalai survey unarthukiradhu. Thanks to padasalai team.

    ReplyDelete
  51. Tet pass & employment seniority best

    ReplyDelete
  52. Tet pass & employment seniority best

    ReplyDelete
  53. tet mark seniority experience mattum parthuthan posting podanum appathan next prachanai varathu.illana 40mark subjectla irunthu exam vainga. 12, degree pakkurathu suttha waste government nalla sinthithu seiyyal padavendum ithu naalaiya puthiyathalaimuraikkaga.

    ReplyDelete
  54. சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  55. நித்தியானந்தம்5/13/2014 8:32 pm

    தழிழ்

    ReplyDelete
  56. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், அனுபவம் அடிப்படையிலும் குறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்கள் வழங்குவது ஏற்புடையதே என்றாலும், இந்த முறை தற்போதைய TET தேர்வுக்கு நடைமுறைப்படுத்துவது என்பது இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிக்கக்கூடும்.

    ஏற்கனவே பல வழக்குகளால் தாமதமாகிக்கொண்டே போகும் ஆசிரியர் பணிநியமனம், இதன் மூலம் மேலும் தாமதமாகலாம்.

    வேலைவாய்ப்பு பதிவு மூப்பு என்பது ஒருவர் எந்த ஆண்டு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தாரோ அந்த ஆண்டிலிருந்தே கணக்கிடப்படுகிறது. ஒருவர் பட்டப்படிப்பு படித்து, குடும்ப சூழல் காரணமாக சில ஆண்டுகள் கழித்து ஆசிரியர் பட்டப்படிப்பு பயின்றிருக்கலாம். இன்னும் சிலர் முதுகலைப் படிப்பு பயின்று அதன்பிறகே ஆசிரியர் பட்டம் பயின்றிருக்கலாம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தம் உள்ளது.

    இப்போதுள்ள தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை, ஆசிரியர்களாக நடத்துவதில்லை. அவர்களுக்கு பல பணிசார்ந்த பல நெருக்கடிகளை அப்பள்ளிகள் வழங்குகின்றன. இதனால் ஆசிரியர்கள் அடிக்கடி பள்ளி மாறும் நிலை ஏற்படுகிறது. மேலும், நிர்வாகத்தின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு சம்பந்தப்பட்ட ஆசரியர்கள் வளைந்து போகாததை கருத்தில் கொண்டு பணி அனுபவச்சான்று கொடுக்க பல பள்ளிகள் முன்வருவதில்லை ! இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் !

    PGTRB க்கு பதவிமூப்பும், பணி அனுபவமும் கணக்கில் எடுத்துக் கொள்வதை TET தேர்வோடு ஒப்பிடுவது குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவலாம். இதற்குக் காரணம் TRB ல் cutoff என்பதை நிர்ணயிப்பதில் தேர்வுத்தாளின் கடினத்தன்மையும் முக்கிய இடம்பெறுகிறது !

    ஆனால், TET தேர்வில், குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி எனும் நிலை உள்ளது. தற்போது நடந்து முடிந்த தேர்வில் கூட சமூக அறிவியல் மற்றும் கணிதம் அறிவியல் என்ற இரு விருப்பப்பாடங்கள் தேர்வர்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தன. இதில் சமூக அறிவியல் பகுதி கேள்விகள் எளிதாகவும், அறிவியல் பகுதி கடினமானதாகவும் இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் TRB ல் உள்ளது போன்று தேர்வுத்தாளின் கடினத்தன்மையை அடிப்படையாக வைத்து, தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு பதில் cut off மதிப்பெண் வழங்க வேண்டும் என்று ஒரு சாரர் கோரிக்கை விடுக்கலாம் ! இது இப்படியே நீண்டு கொண்டே செல்லும் தொடர்கதையாக மாறிவிடும் !

    ஆகவே, TET weightage ல் கிரேடு முறையை இரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி அவர்கள் கூறியது போல, அந்தந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை அப்படியே இரு தசமஸ்தானங்கள் திருத்தமாகக்கொண்டு weightage நிர்ணயிக்கலாம். கூடவே இருவேறு தேர்வர்கள் ஒரே weightage ல் இருந்தால் பிறந்த தேதியின் அடிப்படையில் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கலாம் ! இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியரின் கல்வித்தகுதியும், பதவிமூப்பும் நடுநிலைத்தன்மையோடு பரிசீலிக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை !
    ஆகவே, வரும் ஜூன் மாதத்திற்குள் தகுதிவாய்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிநியமனம் செய்வித்தால் நலமாக இருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. Sir your points 100% correct, practical way of thinking

      Delete
    2. Sir your points 100% correct, practical way of thinking

      Delete
    3. 100% correct sir, practical way of thinking, good

      Delete
  57. vitta application yar first vanguna yar first apply panna enru mark kettu comment poduva

    ReplyDelete
  58. yarukku endha murai sathagamaga ullatho avargaluku theyvaiyana method comment panranga

    ReplyDelete
  59. Tet pass & employment seniority best

    ReplyDelete
  60. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  61. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  62. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  63. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  64. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  65. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  66. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  67. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  68. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  69. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  70. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  71. Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best

    ReplyDelete
  72. Tet friends come on nama, sethu sethu vilaiyaduyoma?

    ReplyDelete
  73. Correct sir

    ReplyDelete
  74. Correct sir

    ReplyDelete
  75. Correct sir

    ReplyDelete
  76. Tet pass Emploiment seniorty than best ithuthan nallathu

    ReplyDelete
  77. 100%correct.
    50%&50%method is correct method

    ReplyDelete
  78. Help me sir i am kannan
    tntet special hall ticket vara maattudhu my no 0889429

    ReplyDelete
  79. Iam kannan speial tet hallticket varala sir my no 0889429

    ReplyDelete
  80. Sir vanakkam.. Muthali Ungaludaiya Intha sevaikku Naan Ungalai Paarattiye Aakavendu "- Vazhthukal" - Tet pass seithavargalai employment seniorityil posting podalam ithu best - Padasalaiyin Karuththu kanippu mikavum Arputham .neenga ivalavu Siramapattu eduththa intha karuththukkanippu padasalai vasakar mattrum aasiriyarkalukku mikavum payanulla vakaiyil ullathu pala vasakarkal kurai koori iruppathu aachcharyathai kaattukirathu itharkku ellam neengal manam thalaraamal ungal Sevaiye engkalukku thodarnthu thaarungal --Thanks to all ur Team.. (Sivaraja -kalvadangam.Salem.)

    ReplyDelete
  81. Only based on Tet mark and community based

    ReplyDelete
  82. Request to Chief Minister for considering Seniority on 3 Mar 2014,
    and weightage survery on 13 May 2014 by padasali, Shows Padasali directly supports seniors to become teacher rather than youngsters.

    Why do you want to ask others opinion, which you have already decided??????????
    Srinivasan

    ReplyDelete
  83. All get equal rights.Posting preference will be given to the seniors rather than juniors. Ellam ellarum peravae intha Arasu.Govt should help the TET passed SENIOR students with their seniority wise posting and enlighten their life in the earth...

    ReplyDelete
  84. Employment seniority tha best .

    ReplyDelete
    Replies
    1. Tet with their state level employment seniority wise posting is the best system.If the govt may implement this, all the well experienced seniors teachers tried their best and get the Tet pass mark and also get the teaching post.

      Delete
  85. Yes. ELLARUM ELLAM PERAVAE INTHE ARASU .This is our Govt Motto. In 2012 Tet all the juniors got the job. Our govt please help in 2013 Tet seniors also with their state employment seniority

    ReplyDelete
  86. GOOD SURVEY

    ReplyDelete
  87. tet pass + seniority

    ReplyDelete
  88. manbumigu puratchitalaivi amma avrgalukku teriyavendum. nam kanneer kathai. tet+seniority

    ReplyDelete
  89. yen endral tet enbadu eligibility test only. so tetl pass seidavargalukku employment seniorityl velai koduppade sirappana valiyagum

    ReplyDelete
  90. yes ur thought is 100%correct tetpass+seniority dan best

    ReplyDelete
  91. tet mark parthu appoinment panunga pls

    ReplyDelete
  92. Yes.Nos of senior teacher having more than 15 years employment registration with their dist is working with low salary.So govt give job to these Tet passed students.

    ReplyDelete
  93. entha method follow panalum case poda oru group irukum..

    ReplyDelete
  94. ungaluku vera velaye illaya??? neenga yaru itha sollu? dont give mark for age & seniority.

    ReplyDelete
  95. This comment has been removed by the author.

    ReplyDelete
  96. ithu ellam vellaiku agathu , innum eppadiyum one year agum. adutha vellai irutha parunga. intha nadum nattu makkalum nasamai pogatum. arignar anna

    ReplyDelete
  97. Election result is favor for Amma. So, very soon we will get job. After the M.P election, the first great function is ours.Believe!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive