Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!!

          முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர். கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி எழுத்து தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது. 

           சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரப் பெற்றுள்ளது. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் (ஒரு விண்ணப்பம் ரூ.50 விலை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 11 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வரவழைத்து, நேற்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரி பார்த்து பெறும் இடத்தில், அதிகமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளியூர்களில் இருந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வருவோர் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையிலும், சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பம் பெறுவதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive