Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளின் வசதி பற்றியும் ஆய்வு : பிளஸ் 2 தேர்வு ஆய்வுக்கூட்டம்

           பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட உள்ளூர் விடுமுறைகள் எந்தெந்த தேதிகளில் வருகிறது, அந்த தேதிகளில் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு பிரச்னை வருமா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். 

         அதற்காக ஒரு ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. வழக்கமாக இது போன்ற ஆய்வுக் கூட்டங்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்தில்தான் நடப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
 
          அதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். மேலும், உள்ளூர் விடுமுறைகள் குறித்த பட்டியல்களையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து கொடுத்துள்ளனர். இதை வைத்து தற்காலிக தேர்வு அட்டவணை தயாரிப்பார்கள். அதற்கு பிறகு இறுதி அட்டவணைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தேர்வு தொடர்பான விஷயங்கள் தவிர, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கட்டமைப்பு வசதிகள், உபரி ஆசிரியர்கள், மாணவர்கள் சதவீதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive