NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு தேர்வு முடிவால் விரக்தி '104'ல்1,041 பேருக்கு ஆலோசனை

           பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளால் விரக்தி அடைந்த தங்களின் குழந்தைகளுக்கான, '104' சேவை மையத்தை, பெற்றோர் அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.
 
          பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று வெளியாகின. மதிப்பெண் குறைவு மற்றும் தோல்வியால் மாணவர்கள் தற்கொலை எண்ணம் வரை செல்லாமல் இருக்கும் வகையில், தமிழக அரசின், '104' ஆலோசனை மையத்தில், சிறப்பு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில், நேற்று மட்டும், 1,041 பேருக்கு, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, சேவை மைய உளவியல் ஆலோசகர்கள் கூறியதாவது:'ஒரு பாடத்தில் தோல்வி என, பக்கத்து வீட்டு மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுபோல் தோல்வி அடைந்த என் மகனுக்கும் தற்கொலை எண்ணம் வருமோ என, பயமாக உள்ளது'என்பது உட்பட பலவித சந்தேகங்களுடன் ஏராளமான பெற்றோர் அழைத்தனர்.

பெற்றோருக்கும், மாணவ, மாணவியருக்கும் உரிய ஆலோசனை வழங்கினோம். நேற்று மாலை, 7:00 மணி வரை தேர்வு முடிவுகள் தொடர்பாக, 1,041 அழைப்புகளுக்கு ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. எங்கள் ஆலோசனையால், ஒரு உயிர் காப்பாற்றப்பட்டாலும் மகிழ்ச்சி தான். இன்றும் ஆலோசனை தொடரும்.இவ்வாறு ஆலோசகர்கள் கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive