Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக தேர்தல் முடிவை 25ஆம் தேதி அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.


232 தொகுதிகளிலும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறுகிறது
.இதையொட்டி, 3,236 மேசைகள் அமைக்கப்பட உள்ளன. 219 தொகுதியில் ஒரு சுற்றுக்கு, 14 மேசைகளும், 9 தொகுதிகளில் ஒரு சுற்றுக்கு 10 மேசைகளும், 2 தொகுதிகளில், 12 மேசைகளும், 3 தொகுதிகளில், 20 மேசைகளும், ஒரு தொகுதியில் 24 மேசைகளும் அமைக்கப்பட உள்ளன.
முதல் முறையாக..:
 வாக்கு எண்ணிக்கை, காலை 8 மணிக்கே தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அனைத்துத் தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகளை மே 25 அன்றுதான் அறிவிக்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில்சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதனை அவசரவழக்காக இன்றே (மே 18) விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் இன்று அந்த இயக்கம் வலியுறுத்த உள்ளது.தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு, 25ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive