Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மக்கள் என்னை கைவிடவில்லை: ஜெயலலிதா

      சென்னை:தமிழக மக்கள் என்னை கைவிடாமல், 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெறும் வகையில் முன்னணியில் உள்ளது.இதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் இல்லத்தில் சந்தித்து, அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:நடைபெற்ற தேர்தலில் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி அமைத்தேன். மக்கள் என்னைக் கைவிடவில்லை.1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தந்த மக்களுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்றியை தெரிவிப்பதற்கு அகராதியில் கூட வார்த்தைகள் இல்லை.மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற தாரக மந்திரத்தை இந்த தேர்தல் பிராசரத்தின் போது வைத்தேன். அதன்படி தமிழக மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். என் தவவாழ்வைதமிழக மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன்.இனி புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றார் ஜெயலலிதா.




2 Comments:

  1. amma avargale makkal ungalai eppovo kaivittuvittargal.kantainer thaan ungalai kappatri irukkirathu. ungalai pola arasiyalvathi irukkum varaikkum tamilnadu uruppudathu.

    ReplyDelete
  2. amma avargale makkal ungalai eppovo kaivittuvittargal.kantainer thaan ungalai kappatri irukkirathu. ungalai pola arasiyalvathi irukkum varaikkum tamilnadu uruppudathu.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive