Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்துக்கு புயல் அபாயம் இல்லை; கனமழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன்


சென்னை : தமிழகத்துக்கு புயல் அபாயம் இல்லை என்றும், வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
                 சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன்,  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று காலை 5 மணியளவில் சென்னையில் இருந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே  120 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
                    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடகிழக்கில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.
இந்த புயல் சின்னம் ஆந்திரா - ஒடிசா ஒட்டிய கடற்கரையில் கரையை நோக்கி நகர்ந்து அங்கே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கனத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இருந்து நகர்ந்து செல்வதால் படிப்படியாக மழை குறையும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive