தொடக்க கல்வித்துறையில் நீண்டநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பில் உள்ள
ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில்,
1,200க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. சில
பள்ளிகளில் ஆசிரியர்கள் முறையாக வகுப்பு எடுப்பதில்லை என்ற புகார்
எழுந்துள்ளது.வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணக்குகளுக்கு தீர்வு காணுதல்,
உள்ளிட்ட திறன்களில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பின்தங்கியிருப்பது
தெரியவந்துள்ளது. சில ஆசிரியர்கள் முறையாக பள்ளிக்கு, வராததே இதற்கு காரணம்
என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்காக, மாவட்ட வாரியாக, தொடக்க,
நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி
விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு, இயக்குனர் கருப்பசாமி,
சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் அய்யண்ணன், ''நீண்டநாள் விடுப்பில், மூன்று ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயர் பட்டியலை,
இயக்குனரகத்துக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளோம்,'' என்றார்
Quarterly Exam Questions Answers
Home »
» மாவட்ட வாரியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நீண்டநாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்போர் பட்டியல் அனுப்புமாறு இயக்குனர் , சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...