NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் - முதல்வர்




இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;

* தமிழ்நாட்டில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. விவசாய விலை பொருட்கள் போக்குவரத்துக்கு தடை இல்லை.

* சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

* மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிர நிலையில் உள்ளது.

* மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது.

* தமிழகத்தில் உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை.

* கோயம்பேட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படும் என முன்பே கணித்து அரசு எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் ஏற்கவில்லை.

* சென்னையில் இருந்து சென்றவர்களால்தான் மற்ற பகுதிகளில் கொரோனா பரவியது. கோயம்பேடு சந்தைக்கு 20 ஆயிரம் பேர் சென்று வந்துள்ளனர்.

* மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

* சென்னையில் நெரிசலான பகுதிகளில் 26 லட்சம் மக்கள் வசித்து வருகின்றன.

* தமிழகத்தில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

* அரசின் அறிவுறுத்தலை கடைபிடித்தால் கொரோனா தொற்று பரவலை தடுக்கலாம்.

* பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா பரவலை தடுப்பது சுலபமல்ல.

* வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

* தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறோம்.

* 10 வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பேருந்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

* படிப்படியாக அனைத்து தொழிலாளர்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

* பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்த பிற இடங்களில், 50 சதவீத தொழிலாளர்களுடன், தொழிற்சாலைகள் இயங்கலாம்.

* விதிகளை மீறி சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 நாட்கள் கழித்து திறக்கலாம்.

* அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு.

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், அனைத்து பணியாளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

* அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

* விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பாராட்டு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive