NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்!

SSLC MARCH 2020 MARK SHEET DISTRIBUTION INSTRUCTIONS 

IMG_20201020_154748

பள்ளிகளில் தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் :


1. மதிப்பெண் சான்றிதழ்களை பெற நீண்ட வரிசையில் மாணவர்கள் பெற்றோர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு , மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் குறித்து முன்னரே மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் . ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிக்கு வருகை புரியுமாறு திட்டமிடுதல் வேண்டும்.


2 . மாணவர்கள் வரிசையில் நிற்கும்பொழுது சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக தரையில் போதிய இடைவெளி விட்டு குறியீடுகள் உருவாக்கிட வேண்டும்.


3 . மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.


4 . மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் வழங்கும் நாளன்று பள்ளி நுழைவு வாயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சமூகஇடைவெளிக்கான விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் . 


5. மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் / ஆசிரியர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருத்தல் வேண்டும் . 


6. சான்றிதழ்களை தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் பெற்றுக் கொள்ள ஏதுவாக பள்ளித் தலைமை ஆசிரியர் இரண்டு வகுப்பறைகளை காத்திருப்பு அறைகளாக ( Waiting rooms ) அமைத்தல் வேண்டும்.தேர்வர்கள் பெற்றோர்கள் காத்திருக்கும் அறைக்கு வெளியே கூட்டம் கூடுவதற்கு அனுமதித்தல் கூடாது.


7. பள்ளி வளாகத்தில் கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும் . அதற்கேற்ப பள்ளியின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி ஆகியவற்றில் சோப்பு மற்றும் கை கழுவுவதற்கு தகுந்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.


8. மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்களுக்கு வழங்கிடுவதற்கு முன்னரே பள்ளிகளில் உள்ள காத்திருப்பு அறைகள் ( Waiting rooms ) மற்றும் சான்றிதடிந விநியோகிக்கும் அறைகளில் உள்ளமேசை , நாற்காலி , கதவு , ஜன்னல் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


9 . சான்றிதழ்கள் விநியோகப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் , பணியாளர்கள் , அனைவரையும் அவர்களது கைகளை சோப்பு / Hand Sanitizers கொண்டு சுத்தம் செய்த பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.


10. ஆசிரியர்கள் / பணியாளர்கள் / மாணவர்கள் / தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல்வேண்டும்.


11. ஆசிரியர்கள் / பணியாளர்கள் / மாணவர்கள் அனைவரும் தேவையின்றிபள்ளி வளாகத்திற்குள் கூட்டம் கூடுதல் கூடாது என அறிவுறுத்துதல் வேண்டும்.


12 . மேலும் , அரசாணை ( நிலை ) எண்.379 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை , நாள்.22.07.2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ளநிலையான வழிகாட்டு நடைமுறைகள் அனைத்தும் பள்ளிவளாகத்தில்கண்டிப்பாக பின்பற்றப்படுதல் வேண்டும் . மேற்குறிப்பிட்ட அறிவுரைகளைப் பின்பற்றி பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்கள் வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

IMG_20201020_154733




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive