NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐஏஎஸ் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் வழக்கு.

ஐஏஎஸ் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளி பெண் தொடுத்த வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு சென்னை அக் .21 : பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஐஏ எஸ்பணி ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை , முறை யாக பின்பற்றவில்லை என கோரி மதுரையைச் சேர்ந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பெண் தொடுத்த வழக்கில் மத் திய அரசு , மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது . மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் , மதுரையைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி பெண் பூரணசுந்தரி தாக்கல் செய்த மனுவில் , கடந்த 2019 - ஆம் ஆண்டு நடந்த குடிமைப்பணி கள் தேர்வில் 286 - ஆவது ரேங்க் பெற்றேன் . எனக்கு இந்திய வரு வாய்ப் பணியில் , வருமான வரித்துறையில் பணி ஒதுக்கீடு செய் யப்பட்டது . 
 
பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஐஏஎஸ் பணி ஒதுக்கீட்டில் வழங்க வேண்டிய இடஒதுக்கீடு முறையாக பின் பற்றவில்லை . மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016 - இன் படி எனக்கு ஐஏஎஸ் பணி வழங்க மத்திய அரசு , மத்தியப் பணியாளர் தேர்வாணையத் துக்கு உத்தரவிட வேண்டும் . இடஒதுக்கீட்டை முறையாக பின்பற் றாமல் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன ஒதுக்கீட்டை ரத்து செ ய்ய வேண்டும் என கோரியிருந்தார் . இந்த மனுவை விசாரித்த மத் திய நிர்வாகத் தீர்ப்பாயம் , மனு தொடர்பாக மத்தியப் பணியாளர் துறை செயலர் மற்றும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது . மேலும் கடந்த 2019 - ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வின்படி வழங்கப்பட்ட நியமன ஒதுக் கீடு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்த ரவிட்டு விசாரணையை வரும் 2021 - ஆம் ஆண்டு ஜனவரி மாதத் துக்கு ஒத்திவைத்துள்ளது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive