பி.எட். சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வில் முதல்கட்டமாக 1,800 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதாக கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டு (2026-27) பி.எட். சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 3149 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விருப்பமான கல்வியியல் கல்லூரியை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்தது. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கான பிடித்தமான கல்லூரியை தேர்வு செய்தனர்.
இந்நிலையில், முதல்கட்டமாக 1,800 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது.
மாணவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்ப ஐடி-யை பயன்படுத்தி www.twise.ac.in என்ற இணையதளத்தில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒதுக்கீ்ட்டு ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டு (2026-27) பி.எட். சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 3149 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விருப்பமான கல்வியியல் கல்லூரியை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்தது. கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கான பிடித்தமான கல்லூரியை தேர்வு செய்தனர்.
இந்நிலையில், முதல்கட்டமாக 1,800 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் நேற்று வெளியிடப்பட்டது.
மாணவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்ப ஐடி-யை பயன்படுத்தி www.twise.ac.in என்ற இணையதளத்தில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒதுக்கீ்ட்டு ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லூரியில் ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...