இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:472
குறள்:
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
பொருள்:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.
Love your neighbour as yourself.
தன்னைப் போல் பிறரை நேசி.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .
2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
மழை வந்தால் வளம் வரும்; வளம் வந்தால் வாழ்வு வளரும்.
Thought for the Day :
Rain is the bridge between the sky and the Earth.
பொது அறிவு :
1. கர்பத்தில் உள்ள குழந்தைக்கு எத்தனை மாதங்களில் கைரேகை உருவாகும்?
6 மாதங்களில்.
2. 20 வகை கேன்சர் செல்களை கட்டுப்படுத்தும் காய்கறி எது?
வெள்ளைப்பூண்டு.
English words :
Reliable – Can be trusted, நம்பகமானவர்.
Empathetic – Understands others’ feelings, பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்
புவியியலும் சுற்றுசூழலும் :
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது" என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்றும், கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்றும் அவர் உறுதியாக நம்பினார்.இந்தியாவின் வலிமை அதன் கிராமங்களில் உள்ளது; கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி.
NMMS :
MAT
கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் எத்தனை '6' கள் ஒற்றை எண்ணைத் தொடர்ந்தும் இரட்டை எண்ணைத் தொடராமலும் உள்ளன?
2 5 7 3 6 4 3 4 5 6 8 6 3 4 6 5 3 6 5.
(1) 3.
(2) 2.
(3) 4.
(4) 1.
விடை: (4) 1
ஆகஸ்ட் 14
நீதிக்கதை
பொருளை பாதுகாப்போம் – பொறுப்புடன் வாழ்வோம்
ஒரு சிறிய ஊரில் ஹரிஹரன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு தனது பொருட்களை எங்கு வைத்தான் என்பதே அடிக்கடி மறந்துவிடும். புத்தகத்தை மேசையில் வைத்துவிட்டு பேனாவைத் தேடுவான்; காலணியை ஒரு இடத்தில் கழற்றிவிட்டு வேறு இடத்தில் தேடுவான்.
ஒருநாள் பள்ளிக்குச் செல்லும்போது அவனுடைய கணிதப் புத்தகம் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில், முந்தைய நாள் விளையாடிவிட்டு வந்தபோது புத்தகத்தை வாசல் அருகே வைத்துவிட்டு மறந்தது நினைவுக்கு வந்தது.
அவன் அவசரமாக அங்கே சென்று பார்த்தபோது, புத்தகம் மழையில் நனைந்து சேதமடைந்திருந்தது. ஹரிஹரன் மிகவும் வருந்தினான். அப்போது அவனுடைய தாத்தா, “பொருள் சிறியதாக இருந்தாலும், அது நமக்குத் தேவையானது. ஒவ்வொரு பொருளையும் பயன்படுத்தியவுடன் அதற்குரிய இடத்தில் பத்திரமாக வைத்தால், அதைத் தேடி அலைய வேண்டியதில்லை; பொருளும் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்” என்று அறிவுரை கூறினார்.
அன்று முதல் ஹரிஹரன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். புத்தகங்களை அலமாரியில், பேனாக்களை பெட்டியில், காலணிகளை அதற்குரிய இடத்தில் வைத்து பாதுகாக்கத் தொடங்கினான். சில நாட்களுக்குப் பிறகு, அவனுடைய நண்பன் தனது பேனாவைக் காணாமல் தேடிக்கொண்டிருந்தான். ஹரிஹரன், “நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு நிரந்தர இடம் வைத்துக்கொள். அப்போது பொருட்கள் தொலைந்து போகாது” என்று கூறினான். நண்பனும் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினான்.
நீதி:
நமக்குச் சொந்தமான பொருட்களை அலட்சியமாக வைக்காமல், அவற்றை பத்திரமாகப் பாதுகாத்து, பயன்படுத்திய பிறகு அதற்குரிய இடத்தில் வைப்பது நல்ல பழக்கம்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...