திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:473
குறள்:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
பொருள்:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:473
குறள்:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
பொருள்:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
பழமொழி :
Make hay while the sun shines.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .
2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
மழையை மதிப்போம்; நீரைச் சேமிப்போம்; எதிர்காலத்தை காப்போம். 🌧️💧
Thought for the Day :
Respect the rain, protect the water, preserve the future. 🌧️💙
பொது அறிவு :
1.இந்தியா சுதந்திரம் அடைந்த போது என்ன கிழமை?
வெள்ளிக்கிழமை.
2. zஇந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் யார்?
பிங்காளிவெங்கய்யா.
ஆகஸ்ட் 15
இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.
இன்றைய செய்திகள்
15.08.2026
🗒️சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டு, 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
🗒️இரயில் டிக்கெட்டுகளில் அழியும் மை பிரச்சினைக்கு தீர்வு காண தெற்கு ரெயில்வே கடிதம் இந்திய ரெயில்வே வாரியத்திற்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது.
🗒️மணிப்பூர் மாநிலத்தின் காக்சிங் மாவட்டம் கலெக்டராக (டெபுடி கமிஷனர்) தமிழ்நாட்டை சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏஞ்சலின் ரெனிட்டா பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார்.
விளையாட்டுச் செய்திகள்
🏀இந்தியாவின் 80-வது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ல் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயணம் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டுகிறது.
🏀இலங்கைக்கு எதிராக காலே மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, இந்திய ஆண்கள் அணியின் 600-வது டெஸ்ட் போட்டியாக அமைகிறது.
Today's Headlines
🗒️ This year, the 150th anniversary of the song “Vande Mataram” will also be celebrated grandly during the Independence Day celebrations.
🗒️ To find a solution to the problem of fading ink on railway tickets, the Southern Railway has sent an urgent letter to the Railway Board.
🗒️ A young IAS officer from Tamil Nadu, Angeline Renita, has created a record by taking charge as the Deputy Commissioner (Collector) of Kakching district in Manipur.
🏀 Sports News
🏀 On August 15, India’s 80th Independence Day, the Indian cricket team’s Test journey will reach a new historic milestone.
🏀 The first Test match against Sri Lanka, being played at the Galle International Stadium, will be the 600th Test match for the Indian men’s cricket team.
Covai women ICT_போதிமரம்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...