![]() |
| விக்ரம் சாராபாய் |
இயல் : அரசியல்
அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:470
குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
பொருள்:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
Live with in your means.
வரவுக் கேற்ற செலவு செய்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .
2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
மழையை நேசிப்பவன் இயற்கையை நேசிப்பவன்.
Thought for the Day :
Where rain falls, life flourishes.
பொது அறிவு :
1. தந்தை பெரியாரின் இயர்பெயர் என்ன?
ஈ. வெ.ராமசாமி.
2. பெரியாரை "தந்தை பெரியார் " என்றழைத்தவர் யார்?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
English words :
Disciplined – Follows rules and routines, ஒழுக்கமானவர்.
Resourceful – Finds smart solutions, திறமையாக தீர்வு காண்பவர்
புவியியலும் சுற்றுசூழலும் :
இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு முக்கிய தீவுக்கூட்டங்கள்:
1. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் – வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன.
2. இலட்சத்தீவுகள் – அரபிக்கடலில் அமைந்துள்ளன.
NMMS :
MAT
ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'TOMB' என்பதை '3568' மற்றும் 'GOAL' என்பதை '1572' என குறிப்பிட்டால் 'BOAT' என்பதை எவ்வாறு குறிப்பர்?
(1) 8357.
(2) 8573.
(3) 5378.
(4) 3758.
விடை: (2) 8573
ஆகஸ்ட் 12
நீதிக்கதை
பெரியவர்களின் பலம்
ஒரு சிறிய கிராமத்தில் ஹரிஹரன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் தன்னுடை ய வயதுதான் பெரிய பலம் என்ற எண்ணம் இருந்தது.
ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், “வயதானவர்களிடம் இருக்கும் அனுபவமும் அறிவும் அவர்களுடைய மிகப்பெரிய பலம்” என்று கூறினார்.
அதைக் கேட்டஹரிஹரன் சிரித்துக்கொண்டே , “நாங்கள் இளையவர்கள். எங்களிடம் அதிக உடல் சக்தி இருக்கிறது. பெரியவர்களால் எங்களைப்போல வேகமாக ஓடவோ, வேலை செய்யவோ முடியாது!” என்றான்.
அன்று மாலை ஹரிஹரனும் அவனுடைய நண்பர்களும் காட்டுப்பாதையில் விளையாடச் சென்றனர். சிறிது நேரத்தில் மழை பெய்து, பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. அவர்கள் எந்த வழியில் வீடு திரும்புவது என்று தெரியாமல் குழம்பினர்.
அப்போது அருகில் இருந்த ஒரு வயதான தாத்தா அவர்களைப் பார்த்தார்.
“இந்தப் பாதையில் செல்லாதீர்கள். மழைக்காலத்தில் அந்த வழியில் தண்ணீர் அதிகமாக வரும். என்னுடன் வாருங்கள்; பாதுகாப்பான பாதை எனக்குத் தெரியும்,” என்றார். ஹரிஹரனும் நண்பர்களும் தாத்தாவுடன் சென்றனர். தாத்தா பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை அறிந்தவர் என்பதால், எந்த இடம் ஆபத்தானது, எந்தப் பாதை பாதுகாப்பானது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஹரிஹரன் தாத்தாவிடம், “தாத்தா, உங்களிடம் இளையவர்களைப் போல உடல் பலம் இல்லாவிட்டாலும், உங்களுடைய அனுபவமும் அறிவும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பதை இன்று புரிந்துகொண்டேன்,” என்றான்.
தாத்தா சிரித்தபடி, “ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தனிப்பட்ட பலம் உண்டு. இளையவர்களிடம் வேகமும் உற்சாகமும் இருக்கும்; வயதானவர்களிடம் அனுபவமும் பொறுமையும் இருக்கும். இரண்டும் இணைந்தால் எந்தச் சிரமத்தையும் சமாளிக்க முடியும்,” என்றார்.
🌟 நீதி:
இளையவர்களின் சக்தியையும், வயதானவர்களின் அனுபவத்தையும் மதித்து ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
இன்றைய செய்திகள்









.jpg)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...