Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Census தகவலால் அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் : தனிப்பட்ட விவரங்களை அளிக்க மக்கள் தயக்கம்


Census தகவலால் அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் :  தனிப்பட்ட விவரங்களை அளிக்க மக்கள் தயக்கம் - நாளிதழ் செய்தி 

அரசின் நலத்திட்ட உதவிகள் ரத்தாகிவிடுமோ என்ற அச்சம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் தனிப்பட்ட விவரங்களை அளிக்க கிராம மக்கள் தயக்கம்

களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு, கால அவகாசம் வழங்க கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) விவரங்களை அளிப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் எப்போது ரத்தாகாது என மத்திய அரசு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளனர். இந்த அச்சம் முற்றிலும் அடிப்படையற்றது என்று தெரிவித்துள்ளனர்.

அரசின் விளக்கம் மற்றும் உண்மைகள்

நலத்திட்டங்கள் ரத்தாகாது: 

மக்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும் எந்தவொரு நலத்திட்ட உதவியையும் அல்லது மானியத்தையும் ரத்து செய்யப் பயன்படுத்தப்படாது.

திட்டமிடலுக்கான ஆதாரம்: 

நாட்டின் எதிர்கால வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏழை எளியோருக்கான புதிய நலத்திட்டங்களைச் சரியாக வடிவமைக்கவே இந்தத் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை: 

1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 15-ன் படி, பொதுமக்கள் வழங்கும் தனிப்பட்ட விவரங்கள் முற்றிலும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைக்கப்படும். இவை யாருடனும் பகிரப்படாது.

மக்கள் கவனத்திற்குகணக்கெடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் அச்சமின்றி உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்ய விரும்பினால் Official Census Portal என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive