Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு

            பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விபரங்களை, உடனடியாக ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
                       அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தனி நபர் தகவல் தொகுப்பில், பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் நடப்பு கல்வியாண்டில் பணியில் சேர உள்ளவர்களின் விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதை, கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி அலுவலர்களும், பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இப்பணியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள் ளது.




2 Comments:

  1. இந்த மாதிாி வேலையவே வருஷம் முழுக்க பாா்த்துகிட்டு இருந்தா நாங்கெல்லாம் எப்பதான் பாடம் நடத்துறது. ஏற்கனவே மாணவா்களின் சுமையை குறைக்கிறாதா சொல்லி ஆசிாியா்களின் சுமையை இஷ்டத்துக்கு ஏத்தி விட்டுட்டீங்க.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் தனுஷ்!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive