NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்

           ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

புள்ளி விவரம்:

’யுனெஸ்கோ’ எனப்படும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு மற்றும் ’யுனிசெப்’ எனப்படும், ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2000 - 2012 வரை, தெற்காசியாவில், பள்ளி செல்லா குழந்தைகளாக இருந்தவர்களில், 2.3 கோடி பேர், பள்ளிகளில் காலடி எடுத்து வைத்துள்ளனர்; அவர்களில், 1.6 கோடி பேர் இந்திய குழந்தைகள் என்பது மகிழ்ச்சியான செய்தி. 

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பிற முக்கிய தகவல்களாவன:

* இந்தியாவில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இன்னமும், 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமலேயே உள்ளன.

* உலகில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு, சிறிய நாடுகளின் பங்களிப்பு தான் அதிகம்.

* அல்ஜீரியா, புருண்டி, கம்போடியா, கானா, இந்தியா, ஈரான், மொராக்கோ, நேபாளம் போன்ற, 42 நாடுகளில், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, இந்த, 12 ஆண்டுகளில், பாதியளவு குறைந்துள்ளது.

10 சதவீத சிறுமியர்

* எனினும், 2012ல், உலகம் முழுவதும் உள்ள சிறுவர், சிறுமியரில், 8 சதவீத சிறுவர்களும், 10 சதவீத சிறுமியரும் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். அதாவது, 5.8 கோடி சிறுவர்; 3.1 கோடி சிறுமியர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், கல்வி உரிமைச் சட்டம் அமலில் உள்ளது. பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலும், பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பது, உண்மையில் அதிர்ச்சிகரமான தகவலே.

குறைப்பது எப்படி?

பள்ளி செல்லும் வயதில், பள்ளிகளில் காலடி எடுத்து வைக்காமல் உள்ள குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, பல வித திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என, யுனிசெப் அறிவுறுத்தியுள்ளது.

* பள்ளிகளில் கட்டணங்கள் இருக்கக் கூடாது.

* பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும்.

* குழந்தைகளின் பெற்றோருக்கு, பண உதவி வழங்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive