Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: ஏப்., 1 முதல் அமல்


தமிழகத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில், ஏப்., 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், 43 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை, பல மாநிலங்களை தமிழகத்துடன் இணைக்கின்றன. இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் பராமரித்து வருகின்றன. சுங்கக் கட்டணம் வசூலித்து, சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆண்டுதோறும், சுங்கக் கட்டணத்தை உயர்த்த, சுங்க வசூலிப்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 2015 செப்டம்பர், பல சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
இதை தொடர்ந்து, ஏப்., 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள, 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. தற்போது, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு, 25 ரூபாய் முதல், 75 ரூபாய்; சரக்கு வாகனங்களுக்கு, 300 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 10 சதவீத கட்டண உயர்வு அமலாக உள்ளது. இதனால், சரக்கு வாகனங்கள் வாடகை உயர வாய்ப்பு உள்ளது.
கட்டண உயர்வு அமலாக உள்ள இடங்கள்
சூரப்பட்டு
வானகரம்
கிருஷ்ணகிரி
வேலன்செட்டியூர்
சாலைப்புதுார்
பள்ளிக்கொண்டா
வாணியம்பாடி
எட்டூர்வட்டம்
கப்பலுார்
நாங்குனேரி
பரனுார்
ஆத்துார்
புதுக்கோட்டை
பட்டரை பெரும்புதுார்
சிட்டம்பட்டி
பூதக்குடி
லெட்சுமணப்பட்டி
லெம்பாலக்குடி
நெமிலி
சென்னசமுத்திரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive