Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது.

         தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது.
 
        8 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை நடந்த தேர்வுகளில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியுள் ளனர்.


சிக்கலான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற உயிரியல் தேர்வில் விலங்கியல் பிரிவில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கவலை தெரிவித்தனர்.வேதியியல், விலங்கியல் தேர்வுகள் கடின மாக இருந்ததாக கருதப்படுவ தால் இந்த ஆண்டு பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் குறையலாம். இந்த நிலையில், பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. கடைசித் தேர்வாக இயற்பியல், பொருளாதாரம் ஆகிய தேர்வுகள்நடைபெறுகின்றன.

இதற்கிடையே, முடிவடைந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முழுவீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான ஆன் லைன் விண்ணப்பத்தை ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்ய லாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருக்கிறது. பிளஸ்-2 தேர்வு நாளை முடிவடை யும் நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஏப்ரல் 11-ம் தேதி முடிவடைகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive