60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

கர்நாடகாவில் 2வது முறையாக வேதியியல் வினாத்தாள் வெளியானதால் சர்ச்சை

                  2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் இரண்டாவது முறையாக வேதியியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக
கூறி மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெங்களூரு கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடகம்முழுவதும் மார்ச் 21-ஆம் தேதி 2-ஆம் ஆண்டு பியூசி வேதியியல் பாட பொதுத்தேர்வு நடந்தது. இப்பாடத்தின் வினாத்தாள் கசிந்துள்ளதாக உறுதியான தகவல் கிடைத்ததால், வேதியியல் பாடத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
வேதியியல் பாடத்தின் மறுத்தேர்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்த அறிவிப்பை கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்களும், பெற்றோரும் பெங்களூரு கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிந்துள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கர்நாடக கல்வி அமைச்சர் ரத்னாகர் பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive