NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு ரிசல்ட் நாளை வெளியீடு

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதிய  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
மாணவ மாணவியரின்  செல்போனிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை  ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி  முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்தது. தமிழ்நாடு,  புதுச்சேரியை சேர்ந்த 3,608 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து 96 மாணவ,  மாணவியர் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு 5 திருநங்கைகள் பத்தாம் வகுப்பு  தேர்வு எழுதியுள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் இந்த ஆண்டு 2,794 தேர்வு  மையங்களுடன் கூடுதலாக 237 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுத்துறை  ஏற்கெனவே அறிவித்தபடி நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்  www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளத்தில்  வெளியிடப்படுகிறது.

 நாளை காலை 9.30 மணிக்கு அனைத்து பள்ளிகளுக்கும் இணைய  தளத்தில் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் தேர்வு  முடிவுகளை பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். தேர்வு  முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் மாணவ மாணவியரின் செல்போன்களுக்கும்  மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். 
தமிழகம்  புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் தேர்வு  முடிவு பகுப்பாய்வு அறிக்கை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தே பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவி–்த்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive