NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2018

திருக்குறள்


கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

விளக்கம்:

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டாம்.

பழமொழி

Be a Roman when you are in Rome.
உலகத்தோடு ஒத்து வாழ்

பொன்மொழி

தோல்வி என்பது வெற்றிக்கு எதிரானது அல்ல.
தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி...!

           - பில்கேட்ஸ்

இரண்டொழுக்க பண்பாடு

1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.

பொதுஅறிவு

1.உலக ஓசோன் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

 செப்டம்பர் 16

2.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?

 நீதிபதி.தீபக்மிஸ்ரா

English words and. Meanings

Aggressive---துடிப்புள்ள
Advice.      --- புத்திமதி
Ability.       --- திறமை
Adjacent   --- அடுத்த
Author      --- எழுத்தாளர்

நீதிக்கதை
அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.
 வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர்,  மனைவி பிள்ளைகள் இல்லை. 

ஆனால்,
 "கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்".....!!

 "மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்".....!!

அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.

அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை.

 யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்.

  மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.

 "இவருக்கு அவன் மேல் சந்தேகம்".....!!

 "திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்".......!!

 "காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்"......!!

 "சில நாள்களில் மாலையில் போகிறான்".......!!

 "இரவில் வீடு திரும்புகிறான்"......!!

  "ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ".....!!

என நினைத்தார்....!!

 "இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது".......!!

"தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்".......!!

காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.

 `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது.

 ஒருகட்டத்தில்,
    "போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்"......!!

 ஆனால்,

 'அவன் அப்பாவி'......,
  "அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும்".....,

 "அவனை விடுவித்து விட்டார்கள்".....!!

ஆனால்,
   "அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது"......!!

  'நான் என்ன திருடனா'....? "என்னைப் போய் கைது செய்து விட்டார்களே".....!!

 எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது’ என்கிற.....

" கோபமும் ஆற்றாமையும் எழுந்தது"......!!

அவன்,
 "முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான்"......!!

வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதியிடம் முதியவர்  சொன்னார்...

  "நான் யாரையும் காயப்படுத்தவில்லை".....!

 "வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன்"......!! 
 " அவ்வளவு தான் ".....!!

டிரைவரோ,
   "போலீஸால் தான் அலைக்கழிக்கப்பட்டதை"....,

  அந்த அவமானத்தால் மனது  பாதித்ததை.....,

  "பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் " என்பதை எடுத்துச் சொன்னான்.

 "நீதிபதிக்கு டிரைவரின் நிலையும்".......,

 "பெரியவரின் வீம்பும்  புரிந்தது".......!!

 முதியவரை அழைத்து ...,

 " நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்"......!!

  உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும்

 ஒரு காகிதத்தில் எழுதி....,

 அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து....,

 போகிற வழியெல்லாம்.....,

 " ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள்"......!!

 "நாளை காலையில் வாருங்கள்’’ என்றார்.....!!

அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

 நீதிபதி...,

முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா".......?

 ஆமாம் ஐயா.’’

 நேற்று "நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்"......!!

"அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’.....!!

 "அது எப்படி ஐயா முடியும்"....?

 "அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும்"......!!

"அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது"....?

  "முடியாதில்லையா".....!!

 அப்படித் தான்...
 " நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை"......!!

"ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும்  ஆற்றல் கொண்டவை".....!!

"நம் வாய்க்கு நாம்தான் எஜமானனாக இருக்க வேண்டும்"....!!

அப்போது தான் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு....,

 " நாம் அடிமைகளாக மாறாமல் இருப்போம்"......!!

 உண்மையில்,

"வதந்தி என்பது ஒரு திருடனை விட மோசமானது"......!!

 ஏனென்றால
அது ஒரு மனிதனின் மதிப்பு,
    மரியாதை,
         கண்ணியம்,
             நல்ல குணம்
             அனைத்தையும்
                   களவாடிவிடுகிறது.

"அவற்றை அந்த மனிதருக்கு யாராலும் திரும்பத் தர முடியாது".......!!

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படியும் இருக்கட்டும்.....!!

 நீதிபதி முதியவருக்குச் சொன்ன அறிவுரை....

இன்றைய சூழலில் அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இன்றைய செய்திகள்

02.08.2018

மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வங்கிகளின் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 6.50% ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதனால், வங்கிகள் தரும் வீடு, கார் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் தங்களது சான்றிதழ்களை இணையதளத்திலேயே சரிபார்க்கவும், சான்றொப்பம் பெறும் வகையிலான புதிய வசதி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் 3-ஆவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்.

இத்தாலியுடன் நடைபெற்ற கிராஸ் ஓவர் ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி காலிறுதிக்கு தகுதிபெற்றது.

Today's Headlines
🌸 Going nature's way: organic food restaurants coming up in city., Noticing a growing demand for organic vegetables through fruits and grains among busy bees organic food restaurant and Catering services or mushrooming in the city to Cater to them in Coimbatore.🌾
🌸 London: The world biggest Colony Of  penquins  has reduced by a staggering 88% over the past 35 years according to scientists who said that the reason of collapse remains in mystery🐧
🌸  Washington: scientist including one of Indian Origin, have developed a new method to 3D print battery parts that can we improve the capacity and life of smartphone batteries📲
🌸 Coimbatore: Replica of Indian elephant bull and mountain goat and traditional toys on display at Coimbatore International Airport to promote Tamil culture and wildlife🐘
🌸 London: The Indian women's hockey team got the better of Italy 3-0 on Tuesday to secure quarter final berth at the FIH hockey women's world cup in London🤝💐

Prepared by
Covai women ICT_போதிமரம்




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive