NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா?- உயர்நீதிமன்றம்




நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா? என சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நிதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலாய பள்ளிகளில் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பிலே 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் 7 கிலோ வரை புத்தக பையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன மேலும் 2 ஆம் வகுப்பு பொது அறிவுப்பாடத்தில் நடிகர்கள் பற்றிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
எனவே என்சிஇஆர்டியில் பாடத்திட்டத்தையே சிபிஎஸ்இ- யும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுப்பதாக விளம்பரம் வெளியிட வேண்டும்.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive