NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் எத்தனை நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் முக்கியத் தகவல்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு
அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறிய போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இது குமரி கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய இலங்கைக்கு அருகில் நீடிக்கிறது. இதற்கிடையில் அப்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புண்டு.
இந்த இரு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு உள் தமிழகப் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இதுபோன்ற வானிலை மாற்றங்களால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் முதல் கடலூர் வரை சில இடங்களில் மட்டும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.

தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும். சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive