Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'கற்போம் எழுதுவோம் இயக்கம்" - TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் மைய வருகை விவரம் 31.12.2020 க்குள் முழுமையாக மேற்கொள்ள இயக்குநர் அறிவுறுத்துதல்


 

 

'கற்போம் எழுதுவோம் இயக்கம்" - TN EMIS கைபேசி வாயிலாக கற்போர் (Leaners) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் (Volunteer Teachers) மைய வருகை விவரம் (Attendance) 31.12.2020 க்குள் அனைத்து மையங்களிலும் முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு, பார்வை -இல் காணும் மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிக்காட்டுதல்களின்படி, “கற்போம் எழுதுவோம் இயக்கம் - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 30.11.2020 முதல் கற்போர் மையங்கள் (Leaners Literacy Centers) துவங்கப்பட்டு முதற்கட்டமாக, ஒவ்வொரு கற்போர் மையத்திற்கும் குறைந்த பட்சம் 20 கற்போர்களை இலக்காகக் கொண்டு அந்தந்த தன்னார்வல ஆசிரியர்களின் வாயிலாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இந்நிலையில், சுற்போர் மையச் செயல்பாடுகள், தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் கற்போரின் வருகை விவரங்களை TN-EMIS கைபேசி செயலியில் முழுமையாக பதிவேற்றம் செய்திடும் பொருட்டு உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வை (2) - இல் காணும் இவ்வியக்கக கடிதத்தின்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இணைப்பில் கண்டுள்ள 29.12.2020 அன்றைய TN-EMIS அறிக்கையின்படி கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் TN-EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பெறப்பட்டுள்ளது

TN-EMIS வலைதளத்தில் முன்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் TN-EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வாமைய மேற்பார்வையாளர் (பொ) மற்றும் ஆசிரியர் அனைத்து அலுவலர்களும் கண்காணித்திடும் வகையில் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே , மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் வருகை பதிவு விவரங்கள் TN-EMIS கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வாமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆகிய அனைத்து அலுவலர்கள் நிலையில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு முன் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் TN-EMIS கைபேசி செயலியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கற்போர் மையங்களிலும் எவ்வித விடுதலின்றி 31.12.2020க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்திடும் பொருட்டு உரிய தொடர்நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

Click here to download pdf





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive