Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

     தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
31 ஆம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், 1 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 2 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும், 3 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive