![]() |
| செளரவ் கங்குலி |
Art is long and life is short
கல்வி கரையில் கற்பவர் நாள் சில.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
பொறுமை கசப்பானது; அதன் பலன் இனிமையானது.
Thought for the Day :
Dream big, work hard, stay humble.
பொது அறிவு :
1. நோபல் பரிசு எப்போதும் எந்த நாளில் வழங்கப்படுகிறது?
டிசம்பர் 10.
2. சர்வதே மனித உரிமைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 10.
English words :
Generate – Produce, உருவாக்கு.
Illustrate – Explain, விளக்கிக் காட்டு.
புவியியலும் சுற்றுசூழலும் :
உலகின் மிகப் பெரிய நாடு – ரஷ்யா. இது 11 நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு – இந்தியா
NMMS :
MAT
வேறுப்பட்டதை கண்டுபிடி.
விடை: (2)
ஜூலை 08
நீதிக்கதை
"நல்ல வார்த்தையின் சக்தி"
ஒரு பரபரப்பான கடை வீதியில் ரவி என்ற இளைஞன் பழக்கடை வைத்திருந்தான். அவன் எப்போதும், "இன்று வியாபாரம் எப்படி நடக்குமோ?,சரியாக இருக்காது", "யாரும் வாங்க வருகிற மாதிரி தெரியலையே. இன்றைய பழம் எல்லாம் விற்காமல் அழுகி விடுமோ?" என்று எதிர்மறையாகப் பேசிக்கொண்டே இருப்பான்.
அதே வீதியில் மீனா என்ற பெண் பூக்கடை வைத்திருந்தாள். அவள் எப்போதும், "இன்று நல்ல நாள்!", "எல்லாம் நன்றாக நடக்கும்!", "வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வருவார்கள்!" என்று நேர்மறையான வார்த்தைகளையே பேசுவாள்.
ஒருநாள் இருவரின் கடைக்கும் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்கள் வந்தனர். ரவி முகம் சுளித்து, சற்று சலிப்புடன் , "என்ன வேண்டும்?" என்று கேட்டான். வாடிக்கையாளர்களும் விரைவாக வாங்கிவிட்டு சென்றனர்.
மீனா மட்டும் புன்னகையுடன், "வணக்கம்! உங்களுக்கு என்ன பூ வேண்டும்? இன்று உங்கள் நாள் இனிமையாக அமையட்டும்!" என்று அன்பாகப் பேசினாள். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் மீண்டும் அவள் கடைக்கே வரத் தொடங்கினர்.
சில நாட்களுக்குப் பிறகு ரவி, "என் கடைக்கு ஏன் வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள்?" என்று கேட்டான்.
மீனா புன்னகையுடன், "நாம் பேசும் நல்ல வார்த்தைகளும், நேர்மறை எண்ணங்களும் மக்களின் மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கும். அதுவே வெற்றிக்கான முதல் படி," என்றாள்.
அன்று முதல் ரவியும் நேர்மறையாகப் பேசத் தொடங்கினான். சிறிது காலத்தில் அவன் கடையிலும் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.
நீதி:
நேர்மறை கருத்துகளும் நல்ல வார்த்தைகளும் நம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கான பாதையைத் திறக்கும்.
இன்றைய செய்திகள்









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...