Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜெ. ஜாமீனில் விடுதலை:தனி மனித சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது - சுப்ரீம் கோர்டு உத்தரவு

       ஜெ உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதி மன்றம் உத்தரவு. தண்டைனையையும் நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம் நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
        6 வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்" என்றனர்.

Time Report:

 12. 55 PM: அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்க்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
12. 50 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12.45 PM: ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையோ அல்லது நாளை (சனிக்கிழமை) காலையோ சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
12.43 PM: ஜாமீன் சூரிட்டி வழங்கிய பின்னர், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க முறைப்படி உத்தரவிட்ட பின்னர் அவர் விடுவிக்கப்படுவார்.
12.40 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு நகலை பெற்று அதனை அவரது வழக்கறிஞர்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
12.35 PM: நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. 6 வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்" என்றனர்.
12.30 PM: டிசம்பர் 18-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
12. 27 PM: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12.00 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில், ஃபாலி எஸ்.நாரிமன் வாதாடி வருகிறார்.
11. 30 AM: கட்சி மேலிட உத்தரவை அடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் எவரும் குழுமவில்லை. படிக்க:கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்
11. 15 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அமர்வு விசாரணை நடத்தும் அறையில் ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்தனர். இதனால், பெண் வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தலைமை நீதிபதி கண்டனத்துக்குப் பிறகு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
11. 12 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, வரிசை எண்படி 65-வது மனுவாக இருந்தாலும், இன்று விசாரிக்கப்பட வேண்டிய 20 முதல் 45-வது எண் வரையிலான வழக்குகளில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர்கள் வருகை தராததால் அவை ஒத்திவைக்கப்பட்டன. இதனால், ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் விசாரணை நடைபெறுகிறது.
11.10 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நடைபெறும்.
11. 05 AM: சுப்பிரமணியன் சுவாமி மனுவில், "ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
10. 45 AM: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் வந்தடைந்தார். சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
10. 43 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் இங்கு யாரும் இல்லை.
10.42 AM: உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
10.42 AM: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் நீதிமன்றம் வந்துள்ளார்.
10.40 AM: ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிடும் வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் நீதிமன்றம் வந்தடைந்தார்.
10.32 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, 65-வது வழக்காக விசாரணைக்கு வருகிறது. சசிகலா, இளவரசி மனுக்களுக்கு 68, 69 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று மனுக்களும் ஒரு சேர விசாரிக்கப்படும் என தெரிகிறது.
10.30 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.பி.சிக்ரி ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர்.
10.27 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததே காரணம் என கூறப்படுகிறது. மேலும், ஜாமீன் மனு மீதான தீர்ப்புகள் தமிழகத்தில் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாலும் நீதிபதிகள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.20 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டியுள்ளனர்.
10. 15 AM: ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவையும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.
10. 12 AM: ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதே போல தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, இவ்வழக்கில் அர‌சு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
10.10 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
 

     எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது.



சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது. எனவே வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.
எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18-ம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.
அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

' எவ்வித வாய்தாவும் வாங்க கூடாது'- நிபந்தனையுடன் ஜெ.,வுக்கு ஜாமின்

கர்நாடக ஐகோர்ட்டில் நடக்கும் அப்பீல் வழக்கில் எவ்வித வாய்தாவும் வாங்க கூடாது என்றும், அப்பீல் வழக்கை தாமதிக்கும் நோக்கில் செயல்படக்கூடாது என்றும், மேலும் வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக இருக்க கூடாது என்றும் சுப்ரீரம் கோர்ட் ஜெ.,வுக்கு பல்வேறு கிடுக்குப்பிடியான நிபந்பதனைகளை பிறப்பித்துள்ளது. 



ஜெ., ஜாமின் மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து தலைமையில் மதன் பி லோக்கூர், ஏ.சி. சிக்கிரி ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 


ஜெ., தரப்பில் பிரபல பாலி நாரிமன் ஆஜராகி வாதிட்டார். இவர் தனது வாதுரையில் , ஜெ., ஒரு முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக ஐகோர்ட் கருத்தில் கொள்ளவில்லை. தண்டனையை நிறுத்தி வைக்கத்தான் நாங்கள் கேட்டோம். ரத்து செய்ய சொல்லவில்லை. இதனால் சுப்ரீம் கோர்ட் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாமின் வழங்கிட வேண்டும் என்றும் வாதிட்டார். 


தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம். நிறுத்தினால் மேல் முறையீட்டை எத்தனை நாட்களுக்குள் முடிப்பீர்கள் ? என நீதிபதிகள் ஜெ., வக்கீல் பாலி நாரிமனிடம் கேட்டனர். மேல் முறையீட்டுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார் நாரிமன். இதனையடுத்து நீதிபதிகள் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கினர்.


நீதிபதிகள் ஜாமின் வழங்கி பிறப்பித்த உத்தரவில், மேல் முறையீட்டு ஆவணங்களை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க துணை புரிய வேண்டும். எந்தவொரு காரணத்தையும் காட்டி வாய்தா கேட்டு இழுத்து அடிக்க கூடாது. ஜெ., டிசம்பர் மாதம் 18ம் தேதி வரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.
டாக்டர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி உண்டு. சாதாரண நபர் போல் வெளியே செல்ல கூடாது. தமிழகத்தில் தங்களின் தொண்டர்கள் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் காரணமாக இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். ஜெ., டிசம்பர் மாதம் 18ம் தேதிக்குள் மேல் முறையீட்டு ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும். இதில் காலம் தாமதம் செய்தால் ஜாமின் உடனடியாக ரத்து செய்யப்படும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் ஜெ., தரப்பு வழக்கறிஞர் நாரிமன் முழுமையாக ஏற்று கொள்வதாக கூறினார். தண்டனை நிறுத்தி வைப்பு மட்டும் எங்களின் முழு கோரிக்கை என்றார். மேலும் வாய்தா காலம் வரை ஜெ., வீட்டிற்குள்ளேயே இருக்க சொன்னாலும், நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் நாரிமன் தெரிவித்தார். 


நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து ஜெ., வக்கீல் குமார் என்பவர் கூறுகையில் எவ்வித நிபந்தனையும் இவ்வாறு விதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இரு நபர் ஜாமின் மட்டும் போதுமானது என்றும் தெரிவித்தார். 


உடல் ரீதியிலான பிரச்னை ; சாமி: கோர்ட் வளகத்தில் , சுப்பிரமணிய சுவாமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக அவரது வக்கீல் கேட்டார். மேலும் அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என்றார். உடல் ரீதியிலான பிரச்னை என்பதால் நான் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் நீதிபதிகள் கடும் நிபந்தனை கூறியுள்ளனர். அவர் எங்கும் செல்லக்கூடாது, கடந்த காலத்தில் பிரபல வக்கீல் கொண்டு பல வாய்தாக்கள் வாங்கியுள்ளனர் என்று கோர்ட்டில் நான் தெரிவித்தேன். இதனை நீதிபதிகள் ஏற்று கொண்டனர் . 

கோர்ட் கொடுத்த கெடு காலத்தில் ஒருநாள் தாமதித்தாலும் ஜெ., ஜாமின் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.




4 Comments:

  1. J : Jeyithu Kondey Irukkum Janangalin Jeevanathi
    YA: Yetharthamana Yelimaiyana Thalaivi
    LA: Latchiyathai Tharage Manthiramai Konda Thange tharagai
    LI : Lilly Malarai Pondra Punnagai Puriyum Poovarasi
    THA; Thayullam Konda Thandamizh Arasi
    Yours Trully
    S.Jovi (above 90 Eduthu Pani Vaippai izhantha Tamil Teacher}

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப குளுருது நண்பா ..
      கட்சி ல சேர்ந்தால் உமது சேவை(???)யை பாராட்டி கட்டாயம் "இன்னோவா" கார் பரிசளிப்பர்...

      Delete
  2. இம்மியளவும் கலப்படமற்ற, நேர்மையான தகவல்களை வெளியிட்டு வழக்கம் போல "நடுநிலை வலைத்தளம்" என்ற பெயரை மீண்டும் நமது பாடசாலை வலைத்தளம் பெற்றுள்ளது .... வாழ்த்துக்கள்....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive