NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டய படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பில் சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெய்வத்தமிழ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ் ஆகம வழிபாட்டை உலகம் முழுவதும் பரப்பும் வகையில் சென்னை தெய்வத்தமிழ் அறக்கட்டளையும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயமும் இணைந்து ‘தமிழ் அருட்சுனைஞர்’ என்ற ஓராண்டு கால பட்டயப் படிப்பை, கடந்த 2011 முதல் நடத்தி வருகின்றன. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இப்படிப்பை முடித்து தமிழ் ஆகமஅந்தணர்களாக பணியாற்றி வருகிறார்கள்.2018-19-ம் ஆண்டுக்கான ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 இப்படிப்பில், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் சேரலாம். விண்ணப்பங்களை www.dheivamurasu.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாதமும் 2, 4-ஆம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

முறையாக தமிழ் ஆகமப்படி பயிற்சி பெற்று அர்ச்சகர் தகுதியுடன் தமிழ் வழிபாடு செய்ய இந்த படிப்பு ஓர் அரிய வாய்ப்பாகும். மேலும், விவரங்களுக்கு 94451-03775 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive