திருக்குறள்:
குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
உரை:
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
பழமொழி :
Many hands make light work.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது நடை, உடை மற்றும் ஒழுக்கத்தின் மூலம் நான் ஒரு மதிப்பு மிகு மாணவன் என்பதை மற்றவர்க்கு உணர்த்துவேன்.
2. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் மரியாதை மற்றும் கீழ் படிதல் உடன் நடந்து கொள்வேன்.
பொன்மொழி :
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் ஆனந்தம் பிறக்கிறது -தங்கரசால்
பொது அறிவு :
01.இந்திய தேசிய யாரால் வரையப்பட்டது?
ஷிபா பிரசாத் சாட்டர்ஜி Shiba Prasad Chatterjee.
02. பாபநாசம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
தாமிரபரணி_ Thamirabarani River
English words :
Analyze – to examine in detail to understand or interpret.
Crisis – a time of intense difficulty or danger.
தமிழ் இலக்கணம்:
பதற்றம், பதட்டம் எது சரி?
பதறு என்ற சொல்லில் இருந்து தான்
பதறி, பதறிய, பதற்றம் என்ற சொற்கள் பிறந்தது.
எனவே பதற்றம் என்பதே சரி.
எழுதும் போது பதற்றம் என்றே எழுத வேண்டும்
மதன் பதற்றத்தோடு பரீட்சை எழுத வந்தான்.
அறிவியல் களஞ்சியம் :
ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அமாவாசை மற்றும் பௌர்ணமி மாறி மாறி வரும். அதனால் மாதத்தில் ஒரு முறையாவது அமாவாசையும் பௌர்ணமியும் வந்துவிடும். 1865ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மட்டும் தான் பௌர்ணமியே வராத மாதம்.
ஏப்ரல் 01
வாங்கரி மாத்தாய் அவர்களின் பிறந்தநாள்
வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினார்.இளங்கலை முதுகலைப் படிப்புகளை அமெரிக்காவில் முடித்தார்.1971 இல் கென்யாவிலேயே முதல் டாக்டர் பட்டம் பெ ற்றபெண்மணி இவரே. நைரோபிப் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியர் என்னும் மதிப்பையும் பெற்றார்.
1977இல் தம் பேராசிரியப் பணியைத் துறந்தார்.அந்த ஆண்டில் உலகச் சுற்றுச் சூழல் நாள் அன்று (சூன் 5) தம் வீட்டின் தோட்டத்தில் ஒன்பது செடிகளை நட்டு மரங்களை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார்.இவ்வாறு பசுமைப் பட்டை இயக்கம் என்பதைத் தொடங்கினார்.ஆப்பிரிக்கக் காடுகளை மீண்டும் உருவாக்குவதும் காடுகள் அழிப்பினால் ஏற்பட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதும் இவ்வியக்கத்தின் நோக்கங்கள் ஆகும்.30 ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை வளர்க்க ஏழைப் பெண்களைத் திரட்டினார்.இவற்றோடு மக்கள் கல்வி,குடும்பக் கட்டுப்பாடு ஊட்டச் சத்து ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றிலும் பசுமை பட்டை அமைப்பு ஈடுபட்டது.1980 களில் பெண்களுக்கான தேசியக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.பின்னர் சனநாயக ஆதரவு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார்.நைரோபில் இருந்த ஒரே பூங்காவான உகூரு என்னும் பூங்காவை அழித்து 62 அடுக்குகள் கொண்ட பெரிய கட்டடத்தைக் கட்ட அரசு முனைந்தபோது மாத்தாய் போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.பல்வேறு சமூக முன்னேற்றங்களுக்கான போராட்டங்களில் இவர் ஈடுபட்டதால் மீண்டும் மீண்டும் சிறைப்படுத்தப் பட்டார்.கண்ணீர் புகைக்குண்டு, தடியடி இவரைப் பதம் பார்த்தன.இவருடைய இடைவிடா போராட்டங்களினால் உலகம் இவரைத் திரும்பிப் பார்த்தது. இவருடைய சுற்றுச்சூழல் சேவையைக் கணக்கில் கொண்டு அவரின் சேவையைப் போற்றும் வகையில் நோபல் அமைதிப் பரிசு மாத்தாய்க்கு வழங்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் வளர்ச்சியும் சனநாயகமும் பேணப்படு கின்றன என்று கருதி மாதாய்க்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமையும் அவருக்கு உண்டு.
நீதிக்கதை
யார் வள்ளல்?
முன்னொரு காலத்தில் பொதிகை மலையை மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. மற்றொரு நாட்டின் மன்னனான குணசீலன் என்ற மன்னன் மாறனைப் பற்றி கேள்விப்பட்டான். சிறிய பகுதியை ஆளும் மாறனுக்கு இவ்வளவு நற்பெயரா? நான் அவனைவிட வாரி வழங்கி பேரும் புகழும் பெற வேண்டும் என்று நினைத்தான். அதனால் தன்னுடைய பிறந்த நாளன்று மக்களுக்கு பரிசுகளை வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். மன்னனின் பிறந்த நாள் வந்தது. பரிசு பெறுவதற்காக நிறைய பேர் அரண்மனை முன்பாக கூடினர். அங்கிருந்த மேடையில் நின்றபடி ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கிக் கொண்டிருந்தான் மன்னன்.
அப்போது தெற்கு வாயில் வழியாக மூதாட்டி ஒருவர் வந்தார். அவன் முன் கை நீட்டினாள். அவனும் பரிசு தந்து அனுப்பினான். சிறிது நேரம் சென்றது. மேற்கு வாயில் வழியாகவும் அதே மூதாட்டி வந்தாள். அவன் முன் கையை நீட்டினாள். மீண்டும் பரிசு பெற அவர் வந்திருக்கிறார் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அவருக்குப் பரிசு தந்து அனுப்பினான். மூன்றாம் முறையாக அந்த மூதாட்டி வடக்கு வாயில் வழியாக வந்தாள். கையை நீட்டினாள். இந்த மூதாட்டி திரும்பவும் வந்திருக்கிறாளே என்று முகத்தைச் சுளித்துக் கொண்டான். பரிசு கொடுக்க விரும்பமில்லாமல் வெறுப்புடன் அந்த மூதாட்டிக்கு பரிசு தந்து அனுப்பினான்.
திரும்பத் திரும்பத் தான் வருவதை அரசர் தெரிந்து கொண்டார். அதனால்தான் வெறுப்பைக் காட்டுகிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தும் அவள் நான்காம் முறையாகக் கிழக்கு வீதி வழியாக வந்தாள். அரசனின் முன் கையை நீட்டினாள். அவளைப் பார்த்ததும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. மூதாட்டியே! நீ எத்தனை முறைதான் பரிசு பெற்றுச் செல்வாய்? என்னை ஏமாளி என்று நினைத்துக் கொண்டாயா? உனக்குப் பரிசு ஏதும் தர மாட்டேன் என்று அவளை விரட்டினான்.
அங்கிருந்து செல்லாத அவள், அரசே! உங்களைப் போலவே பொதிகை மலை அரசர் மாறனும் பிறந்தநாள் பரிசு வழங்கினார். அவரிடம் நான் திரும்பத் திரும்பப் பதினாறு முறை சென்று கையை நீட்டினேன். என்னைத் தெரிந்ததாகவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் பரிசு தந்து அனுப்பினார். ஆனால், நீங்களோ நான் மூன்றாவது முறை வந்தபோதே கோபத்தைக் காட்டினீர்கள். நான்காவது முறை இல்லை என்றே விரட்டுகிறீர்கள் என்றாள். இதைக் கேட்ட அவன் தன்னால் மாறனைப் போல வள்ளலாக முடியாது என்பதை அறிந்து கொண்டான்.
நீதி :
தானம் செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
இன்றைய செய்திகள்
01.04.2026
⭐சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
⭐ இந்தியாவில் LPG க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெட்ரோல் பங்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
⭐ஏமனின் ஹூத்தி தீவிரவாதிகள் கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தகர்ப்போம் என்று அச்சுறுத்துவதால் உலக நாடுகள் கலக்கமடைந்து ள்ளன.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஷிம்கென்ட் கஜகஸ்தான் செஸ் தொடரில் இந்தியாவின் பிரனவ் சாம்பியன் ஆனார்.
🏀 ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
Today's Headlines
⭐ In cities including Chennai, the prices of daily food items such as tea, snacks, and meals in restaurants and tea shops have increased significantly.
⭐ There is a shortage of LPG in India. As an alternative to LPG cylinders, the central government has announced that kerosene will be sold at two petrol bunks in each district.
⭐ Global nations are concerned as the Houthis in Yemen have threatened to damage undersea communication cables.
SPORTS NEWS
🏀 In the Shymkent, Kazakhstan chess tournament, India’s Pranav emerged as the champion.
🏀 In the third league match of the Indian Premier League 2026, Rajasthan Royals defeated Chennai Super Kings by 8 wickets.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...