![]() |
| குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் |
குறள் எண்:427
குறள்:
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
பொருள்:
அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.
Coming events cast their shadow before
ஆணை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே
இரண்டொழுக்க பண்புகள் :.
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு என்னும் விதைகளை விதைத்து செல்வேன்.
2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
தோல்வி வெற்றியின் தாய்.
Thought for the Day :
Today's responsibility creates opportunities tomorrow.
பொது அறிவு :
1. 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2026 எங்கு நடைபெற உள்ளது?
கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து.
2. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஏப்ரல் 24.
English words :
Essential – Necessary, அத்தியாவசியமான.
Frequent – Regular, அடிக்கடி நிகழும்
NMMS :
XYW, UVT, RSQ, OPN, _______
(1) KLM. (2) LMK. (3) LKM. (4) KML.
Pattern : 2nd, 3rd, 1st
1) correct order is WXY, according to the pattern XYW
2) correct order is TUV, according to the pattern UVT
3) correct order is QRS, according to the pattern RSQ
4) correct order is NOP, according to the pattern OPN
5) correct order is KLM, according to the pattern LMK
விடை: (2) LMK
புவியியலும் சுற்றுசூழலும் :
குடிமையியல்
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆளுகின்றனர். இந்தியா ஒரு ஜனநாயக நாடு.
ஜூன் 12
நீதிக்கதை
திருட்டு முட்டையும் திருந்திய ஓணானும்
ஒரு விவசாயியின் கோழிகள் இடும் முட்டைகளை ஒரு ஓணான் தினமும் திருடி தின்று வந்தது.
அதன் மனைவியும் பிள்ளைகளும்,
"திருட்டு தவறு, ஒருநாள் அதற்கான விலையை கொடுக்க வேண்டி வரும்"
என்று எச்சரித்தும் அது கேட்கவில்லை.
ஒருநாள் விவசாயி ஒரு அவித்த முட்டையை கோழி அருகில் வைத்து விட்டார். வழக்கம்போல் வந்த ஓணான் அதை விழுங்கியது.
அவித்த முட்டை வயிற்றில் சிக்கியதால் வேகமாக நகர முடியவில்லை.
விவசாயி துரத்த, ஓணான் தன் பொந்திற்குள் ஓடியது. தலை மட்டும் உள்ளே சென்றது, ஆனால் உடல் வெளியே சிக்கிக் கொண்டது. விவசாயியிடம் அடியும் வாங்கியது.
அப்போது தான் தன் தவறை உணர்ந்த ஓணான், கடவுளிடம் மன்னிப்பு கேட்டு இனி திருட மாட்டேன் என்று மனந்திரும்பியது.
சிறிது நேரத்தில் முட்டை ஜீரணமாகி, அது பாதுகாப்பாக பொந்திற்குள் சென்றது. அதன்பின் திருட்டை விட்டுவிட்டு நேர்மையாக வாழ்ந்ததாம்.
💎 நீதி :
🔹 திருட்டின் சுகம் சில நாள்; அதன் துன்பம் பல நாள்.
🔹 தவறை உணர்ந்து திருந்துகிறவர்களுக்கு எப்போதும் ஒரு புதிய வாய்ப்பு உண்டு.
🔹 அறிவுரையை கேட்காதவன் அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்வான்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...