Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா

              வேலூர் மாவட்டம் - அரக்கோணம் ஒன்றியம் - ஆசிரியர் தின விழா, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 2013, - 23.11.2013 அன்று காலை 9.00 மணி அளவில் மணி நாயுடு மகாலில் நடைப்பெற்றது.

           அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் உயர்திரு.சு.ரவி அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்கி கல்வி சார்ந்து அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் குறித்து பேசினார். வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.மதி அவர்கள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புறை வழங்கினார். வேலூர் மாவட்ட சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட அலுவலர் திரு. நடராஜன் அவர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்டுள்ள புதுமைகள் குறித்து பேசினார். மாணாவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

TNTET - 2012 Hall Ticket Link


          ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.

Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் DTEd முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை


                ஆசிரியர் பயிற்சி முடிவு வராததால் கூடுதல் மார்க் இருந்தும்ஆசிரியர் பயிற்சி முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் வேதனை

பொதுத்தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை.


            மார்ச் 2014-ல் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி, டிஸ்லெக்சியா மாணவர்களுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இ.வல்லவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவருக்கும் சம்பளம்: சுவிட்சர்லாந்து நாட்டில் புரட்சி திட்டம்


          பெர்ன் : உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்து நாட்டில், அனைவருக்கும், மாதந்தோறும், குறைந்த பட்ச ஊதியம் வழங்கும், புரட்சிகரமான திட்டம் துவக்கப்பட்டுள்ளது.


மாநகராட்சி பள்ளி 10, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சுண்டல் மன்றக்கூட்டத்தில் தீர்மானம்


          மாநகராட்சி பள்ளியில் 10, 12–ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பில் இலவசமாக சுண்டல் வழங்கப்படும் என்றும், சென்னையில் இயங்கும் 200 அம்மா உணவகங்களில் தலா 3 நவீன கேமராக்கள் வீதம் 600 கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்


              இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரே ஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூசா திட்டம் - 12 மாநிலங்களுக்கு உயர்கல்விக்கென தலா 120 கோடி!


             ரூசா திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த, 12 மாநிலங்களுக்கு தலா 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தலைமைஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு


           தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பதவி உயர்வு கலந்தாய்வு இன்று அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

2 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும், ஒரு முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாறுதலும் வழங்கி உத்தரவு


               ஈரோடு மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி அவர்கள் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கலாவதி அவர்கள் பெரம்பலூர் மாவட்ட அகஇ முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

RMSA High Schools Lab Asst Post Filled by Employment Seniority

          பள்ளிக்கல்வி - RMSA கீழ் 2009-10 / 2011-12ம் ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட 544 உயர்நிலைப் பள்ளிகளுக்கு 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பியது போக எஞ்சிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்பக பட்டியல் பெற்று விதிகளின் படி நிரப்பிக்கொள்ள உத்தரவு

TNTET - Paper 1 -- Tentative No Of Passed Candidates ( Padasalai's List Now Published)




TET 2013 Paper 1 Calculation  - Now Available in www.TrbTnpsc.com Website.


அரையாண்டு தேர்வு 10-ஆம் வகுப்பு டிசம்பர் 12 முதலும், பிளஸ் 2 டிசம்பர் 10 முதலும் தொடங்குகிறது


              அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

பத்தாம் வகுப்பு அட்டவணை

டிசம்பர் 12 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 13 - வெள்ளிக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 - திங்கள்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17 - செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்


டிசம்பர் 19 - வியாழக்கிழமை - கணிதம்

டிசம்பர் 20 - வெள்ளிக்கிழமை - அறிவியல்

டிசம்பர் 23 - திங்கள்கிழமை - சமூக அறிவியல்

பிளஸ் 2 அட்டவணை

டிசம்பர் 10 - செவ்வாய்க்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்


8–வது வகுப்பு மாணவர்கள்: உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.


              8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. 
 

குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு... 1055 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


        குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1055 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
 

3,625 ஆசிரியர்கள் பணிமூப்பு பட்டியல் தயார்: பதவி உயர்வு அறிவிக்காதது ஏன்?


          தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 3625 பேரின் பணிமூப்பு பட்டியல் தயார் நிலையில் இருந்தும் பல மாதங்களாக பதவி உயர்வு அறிவிக்கப்படாத மர்மம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

நல்ல நோக்கத்துடன், ஏற்பாடு செய்தோம்; எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் வேதனையளிக்கிறது - பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் ரகோத்தமன்


         கோவையில், சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி, பலியான சம்பவம் தொடர்பாக உதவி தலைமையாசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.


பிளஸ் 2, 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு


         மாநில அளவில், பொதுத் தேர்வாக, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, டிசம்பர், 10ம் தேதியில் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வு, டிசம்பர், 12ம் தேதியில் இருந்தும் துவங்குகின்றன. மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வை போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும்.  

தொலைதூரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பதாரர்கள் கவலை


             உதவிப் பேராசிரியர் பணியிட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 25ம் தேதி முதல் சென்னையில் நடக்க உள்ள நிலையில் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பணியில் சேர்ந்து 5 ஆண்டு ஆன அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது


              தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 2 தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 
 

தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

       
              தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டு - ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்வு மற்றும் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடக்கம் -அனுமதிக்கப் பட்ட தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 23.11.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு

மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்படும் விபரீதம்


               தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிர மித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் - அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

          2002ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 3% காலி பணியிடங்களை நிரப்ப - சிறப்பு தேர்வு நடத்த விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை பயன்படுத்த வேண்டுமா?


முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெயை பயன்படுத்த வேண்டுமா ?
       தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது போன்றவைகளே, இந்த பிரச்சனைகளுக்கு பெரும் காரணம். அதுமட்டுமல்லாமல், கூந்தலுக்கு போதிய சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையும் சரியாக சாப்பிடுவதில்லை.
 

பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்


            மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

         ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்துப்பட்ட உரிய நாளுக்கு முன்னர் பணியினை துறப்பு செய்த ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் விவரம் அனுப்ப உத்தரவு

 

TET Paper 1 - Tentative Passed Candidates List will publish today.


          இன்று தாள் 1ல் தேர்ச்சி பெற்றவர்களின் தற்காலிக விவரம் வருடவாரியாக, இன வாரியாக வெளியிட உள்ளோம். 

பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

        பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு 

TET FAQ 1


Frequently Asked Questions for TET 1 - சான்றிதழ் சரிபார்ப்பின் போது தற்காலிக பட்டச் சான்றிதழ் (Provisional Certificate) வைத்திருந்தால் போதுமா? அல்லது நிரந்தர பட்டச் சான்றிதழ் (Convacation Certificate) அவசியம் தேவையா?

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று (21.11.2013) விசாரணை

         தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று 21.11.2013வ் வழக்கு விசாரணைக்கு வருகின்றது என்ற தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

TET - 2012 தேர்வானவர்களுக்கு நவ.23 ல் சான்றிதழ் வினியோகம்


            கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த ஆண்டு டி.இ.டி.,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் நவ.23 முதல் வழங்கப்படுகிறது. அக்., 2012 ஜூலையில், டி.ஆர்.பி.,சார்பில், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடந்தது. தாள் 1, 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்தது.

மதுரையில் தொடருது மாணவர்களின் தற்கொலை மிரட்டல்: அலறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்


          வகுப்பறையில் கண்டிப்பதால், தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அலறுகின்றனர். மதுரையில் நேற்று, சமயநல்லூர் அரசு இருபாலர் பள்ளியின் பிளஸ் 1 மாணவர், அரளி விதையை மென்று, தற்கொலைக்கு முயன்றார்.

14 லட்சம் மாணவர்களுக்கு 70 உடற்கல்வி ஆசிரியர்


           எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும், 14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 70 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமா?' என, தமிழக அரசிடம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின், மாநில பொதுச்செயலர், தேவி செல்வம், வெளியிட்ட அறிக்கை:

தகுதி தேர்வில் வெற்றிபெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்ய ஐகோர்ட் அதிரடி தடை


          ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும் தமிழக அரசின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டம்


           தமிழகத்தில் இயங்கும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ''இந்த விவகாரம் குறித்து, முதல்வர், உரிய முடிவை எடுப்பார்,'' என, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்


            ஓய்வூதியதாரர்கள் அனைவரும் உயிர்வாழ் சான்றிதழை (லைப் சர்டிபிகேட்) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

குரூப்-1 தேர்வுக்கான வயதுவரம்பு உயர்வு? - தமிழக அரசு தீவிர பரிசீலனை


              டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.


நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம்.


உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய

(Pass Word For Your Face)

கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.

http://sarfan.blogspot.com/

கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய


http://www.luxand.com/blink/
 
           உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய (Pass Word For Your Face) கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். 
 

ராணுவத்தில் சேர உதவும் சைனிக் பள்ளி.!



         இந்திய ராணுவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் சேருவதற்குத் தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு 1961ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு சைனிக் பள்ளிகளை நடத்தி வருகிறது. 



தமிழக பொது தேர்வுகள் மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


            சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பொது தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சி.பி.எஸ்.இ., தேர்வெழுதுவோர் எண்ணிக்கை இந்தாண்டு அதிகம்

 
                சி.பி.எஸ்.இ., வாரிய பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அடுத்தாண்டு மார்ச் 1ம் தேதி CBSE பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. அதில் 10ம் வகுப்பு தேர்வை மட்டும் சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இது கடந்தாண்டை விட 10% அதிகம்.

30 துணை ஆட்சியர், 33 டி.எஸ்.பி நேரடி நியமனத்துக்கு குரூப்-1 தேர்வு


         30 துணை ஆட்சியர்கள், 33 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 100 உயர் அதிகாரிகளை நேரடியாக நியமிக்க விரைவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது.


புதிய பள்ளிகளுக்கு கட்டட வசதி இல்லை: மத்திய அரசு நிதி வழங்காததால் தொய்வு


          அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், நிலை உயர்த்தப்பட்ட, புதிய பள்ளிகளுக்கான கட்டட நிதியை இரு ஆண்டுகளாக, மத்திய அரசு வழங்கவில்லை; இதனால், பெரும்பாலான புதிய பள்ளிகளில், கட்டட வசதியின்றி, மாணவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மொபைல் மூலம் ஆங்கிலம்: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்


       மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, "அப்ளைடு மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்" ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய பள்ளிகளில் பணியாற்ற சீன ஆசிரியர்கள் தயார்


       இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது. 
 

மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரிய புதிய கண்காணிப்பாளர் நியமனம்

         ஜூலையில் நடந்த, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 'பி' பிரிவு வினாத்தாளில், ஏராளமான கேள்விகள், எழுத்துப் பிழையுடன் இடம் பெற்றன. 

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை: கல்வி துறை செயலர் விளக்கம்


         ''குறிப்பிட்ட அரசு வேலைக்கு உரியகல்வி தகுதியை மட்டும், தமிழ்வழியில் படித்திருந்தால், அவர்கள், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில்,உரிமைகோரலாம்,'' என,பள்ளிகல்வித்துறை செயலர், சபிதா தெரிவித்தார்.

தனித்தேர்வு விண்ணப்பிக்க கணினி மையம் திறப்பு .....

முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை ஏற்பாடு

பரிதவிப்பில் பட்டதாரி ஆசிரியர்கள் - 3மாதம் மட்டுமே பணி செய்ய வேண்டும் .....


           ரூ.2500/- சம்பளத்தில் 3 மாதங்கள் மட்டுமே இவர்கள் பணி .....தினமும் மாலை 5.30 மணி வரை மற்றும் சனிக்கிழமை 12.30 மணி வரையில் பணி புரிய வேண்டும் .

பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


           புதுச்சேரி, - பணிநிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.



ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்கள் ஆர்ப்பாட்டம்


               ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சரியான விடை கொண்டு திருத்தவில்லை அதனால் பலர் பாதிக்கப்பட்டதாகவும் மீண்டும் சரியான விடைகள் கொண்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தேர்வர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்


              தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். 

Tamilnadu School Education Director's Proceeding


  1. 15.11.2011 க்குப் பிறகு அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் இரத்து செய்யப்பட வேண்டும் - Click Here

மாற்றுத் திறனாளிகள் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை தமிழக அரசு சலுகை


         மாற்றுத் திறனாளிகள்   சொந்த மாவட்டத்தில் பணியாற்ற முன்னுரிமை தமிழக அரசு சலுகை மேலும் ...

அரசு பள்ளிக்கூடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!


               மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அரையாண்டுத் தேர்வு: குறைந்த மதிப்பெண் பெறும் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி


            "அரையாண்டுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒன்றிய வாரியாக சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளதாக" விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

மத்திய பல்கலை துணைவேந்தர் நியமனம் - இனி கட்-ஆப் வயது உண்டு


           இனிமேல், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், மத்திய பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்ற முடிவை, மனிதவளத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

            DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
              சென்னை, நவ. 18-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 25-ம் தேதி தொடங்குகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள்

453 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை


           அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. 
 

20 ஆண்டு பணியாற்றிய ஆசிரியருக்கு தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் தர முடியாது


          விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன் உள்பட 129 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:நாங்கள் பள்ளி கல்வித்துறையில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு இதுவரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பது இல்லை.
 

குளிர் காலத்தில் தாக்கும் முகவாதம் : எச்சரிக்கை ரிப்போர்ட்


facial palsy           அழகான முகம் திடீரென்று ஒருபக்கம் இழுத்துக்கொள்ளும், வாய் கோணல் ஆகிவிடும். கண் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டாலே முகவாதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதி அறிவிப்பு

                சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது புதுசு :10 நிமிடத்தில் மணியார்டர் பணம் பட்டுவாடா தபால் துறையில் புதிய சேவை அறிமுகம்


            தபால் நிலையங்கள் மூலம், 10 நிமிடத்தில் பணம் பட்டுவாடா செய்யும், மொபைல் மணியார்டர் சேவை, நேற்று துவங்கியது.
 

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வருகிறது டயல் 104 சேவை


              தொலைபேசி மூலம் வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெற தமிழகம் முழுவதும் 104 சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.
 

மகாராஷ்ட்ரா அரசு பள்ளிகளில் பாடப்புத்தகத்தில் சச்சின்


               மகாராஷ்ட்ரா அரசு பள்ளிகளில் சச்சின் டெண்டுல்கர் தொடர்பான பாடங்கள் இடம்பெறவுள்ளது என அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திர டார்டா கூறியுள்ளார். 

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்


பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்:

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive