NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்

            தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
          அதில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் உட்பட 6 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. இதற்கிடையில், தமிழக உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி ஆகிய தலைவர் பதவிக்கு கடந்த ேதர்தலில் நேரடியாக மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தனர். ஆனால், இந்தமுறை நேரடி தலைவர் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களே, தலைவர்களே தேர்வு செய்வார்கள். இதற்கான அரசாணை சமீபத்தில் தமிழக அரசு பிறப்பித்தது. அதே சமயம் பொது, பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எது என்பது குறித்த முழு விவரம் தெரியாமல் இருந்தது.

அதேநேரத்தில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்கள் வேட்பு மனுக்களை மாவட்டச் செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தன. ஆனால் எந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டுகள் இடஒதுக்கீட்டில் யாருக்கு ஒதுக்கப்பட்டது என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திணறி வந்தனர். இதனால் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடமா என்பது தெரியாமல் ஆண்களும் விண்ணப்பித்த அவலம் நடந்தது. தனி வார்டில் பொதுப்பிரிவினர் போட்டியிட தங்கள் கட்சியில் விருப்ப மனு அளித்த சம்பவமும் நடந்தது. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இந்த குழப்ப நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதாவது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அரசாணை விவரம் வருமாறு:

மாநகராட்சிகள்:

பெண்கள்: சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
பொது: திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை, ஈரோடு ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவி (பொது) ஆண்கள் அல்லது பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
எஸ்.சி.எஸ்.டி.(ஆண்): தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி/எஸ்டி(ஆண்)க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  
நகராட்சிகள்:
எஸ்.சி(பொது): நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலைநகர்.
எஸ்.சி(பெண்கள்): ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோவில், பேர்ணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர். எஸ்.சி.டி(பெண்கள்): கூடலூர். 
பெண்கள்(பொது): ஆம்பூர், குடியாத்தம், திருவத்திபுரம், வந்தவாசி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், அறந்தாங்கி, ஜெயங்கொண்டம், தேவக்கோட்டை காரைக்குடி, கீழக்கரை. தாராபுரம், உடுமலைப்பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், 
பத்மநாபபுரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர், வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை. மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம். 
பொது: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனாகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சிபுரம். பெண்கள்: செங்கல்பட்டு, மதுராந்தகம்.
எஸ்,சி(பொது): மறைமலைநகர்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள்:
பொது: திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி, 
எஸ்.டி பெண்கள்: நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி(பொது): நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள்(பொது): காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி. ஆகியவை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் வார்டு வாரியாக ஒதுக்கீடு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

* தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. 
* 2011ல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 2016 அக்டோபர் 24ல் பதவிக்காலம் முடிவடைகிறது.
* இந்த தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 26க்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
* இன்று உள்ளாட்சி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive