துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு

தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (செப்.27) நடைபெறவுள்ளது.
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.26) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அகில இந்திய மருத்துவ இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் காரணமாக, அன்றைய தினம் நடைபெறவிருந்த பிற படிப்புகளுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, டி.பார்ம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.27) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive