Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாட்டில் 40 சதவீத பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை:சர்வே

          தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக சர்வே கூறுகிறது.இந்தப் பற்றாக்குறை மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கின்றது. 
 
          நாடு முழுவதும் இந்த நிலை நீடித்து வருவதாகவும், ஒரு பள்ளிக்கு ஒரு மொழிப்பாட ஆசிரியர்களே, அனைத்து வகுப்புகளுக்கும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சாதனையாளர் சர்வே கூறியுள்ளது.

           தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 35.85 சதவீதம் மொழி பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. அண்டை மாநிலங்களான கேரளா (11.23), தெலங்கானா (29.45), ஆந்திரா (23.32) மற்றும் கர்நாடகாவில் (2.87) சதவீதம் என ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

                ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றது. மேலும், இந்த நிலை நீடிக்குமேயானால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் குறைவாக இருப்பதே முதற்கட்ட காரணம் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive