NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



வழக்கமாக ஜூன் 1ம் தேதி முதல் தான் தென்மேற்கு பருவமழை தொடங்கும், இந்நிலையில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்பே (மே 29) தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வந்தது. 
இதனையடுத்து  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் நாளை முதல் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. கர்நாடக கடலோரப் பகுதிகளில் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு நீர்வரத்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களை பொருத்தவரை வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை மழைக்கு இப்போது வாய்ப்பு குறைவு என்றும் வெப்பநிலை இயல்பு வெப்பநிலைக்கு மாதிரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive