NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரைப்பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு!

ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.

குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் பதிவு செய்யுங்கள்: தமிழக அரசு.
 

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செயய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு!

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திடுவீர் 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை . பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி . குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவு சட்ட 1969 வழி வகை செய்கிறது . பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழ் ஆகும் . பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர , வாக்காளர் அடையாள அட்டை பெற , வயது குறித்து ஆதாரம் , ஓட்டுநர் உரிமம் பெற , பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற இன்றிமையாத ஒன்றாக உள்ளது . ஒரு குழந்தையின் பிறப்பு , பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம் . 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை , பதினைந்து வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம் . . திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு , இறப்பு பதிவு விதிகள் 2000 - ன் படி , 1.1.2000 க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழி வகை செய்யப்பட்டது . மேற்கண்ட கால அளவு முடிவுற்ற பின்னும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்தது . அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019 உடன் முடிவுற்ற நிலையில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொது மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் . இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது . பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை களைந்திட , • 1.1.2000 க்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள் வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவுற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாச நீட்டிப்பு இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது .

https://1.bp.blogspot.com/-LtyejCayrSA/X9JSoYFOfMI/AAAAAAAAALo/KSwign1ThnUgvtGCQQii3Xxh9L6Pmi-SACLcBGAsYHQ/s16000/Screenshot_20201210-221819__01.jpg  

CLICK HERE TO DOWNOAD PDF




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive