பள்ளிக்
கல்வித் துறை வளர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து பள்ளிக்
கல்வித் துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் இன்று (20.01.2026) கன்னிமாரா நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை வளர்ச்சித் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அலுவலர்களுடன் விரிவான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்தரமோகன்.B இ.ஆ.ப., பொது நூலகத் துறை இயக்குநர் திருமதி ஜெயந்தி, இ.ஆ.ப., ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலதிட்ட இயக்குநர் மரு. மா.ஆர்த்தி, இ.ஆ.ப., மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் திரு. சுதன், இ.ஆ.ப., (வி. ஓய்வு), பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர். ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர்.பூ.ஆ.நரேஷ் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...