Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி


          மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10 முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.


தமிழகத்திலிருந்து 2012- ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் 22 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு


         இந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


           மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள்  இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.

TNTET - நுழைவுச்சீட்டுகளை இணையத்திலிருந்து மட்டும் தான் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


             ஆசிரியர் தகுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு,இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன.

கல்வியால் மட்டுமே நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்


             "கல்வியால் மட்டுமே நாடு அமைதியாகவும் வளர்ச்சி பாதையிலும் செல்லும்," என, அன்னை தெரசா மகளிர் பல்கலை துணை வேந்தர் மணிமேகலை, பேசினார்.

 

சிறுபான்மையின மாணவர்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பம் வரவேற்பு


             பிளஸ்1 வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு மவுலானா ஆஸாத் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியான மாணவ, மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

   

இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை : அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக இயக்குனர் உறுதி


              இன்று 03.08.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் புதிதாய் பொறுப்பேற்ற தொடக்க கல்வி இயக்குநர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் குழுவின் பாராபட்ச போக்கை - விரிவாக நிதி இழப்புடன் எடுத்துக் கூறினர்.



டி.ஆர்.பி., புதிய தலைவராக பதவியேற்றார் விபு நய்யார்


             டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார், பதவியேற்றார். டி.ஆர்.பி., தலைவர் பதவியில், இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.

ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவு: நேரில் வரத்தேவையில்லை


             தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்" பதிவு செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது.




தனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்


             நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்


             அரசு உதவி பெறும் கல்லூரிகளில், காலியாக உள்ள, 3,000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் கல்வித் துறைக்கும், நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சதுரங்க போட்டிகள் நடத்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவு


             "அனைத்து வகை பள்ளிகளிலும், வரும், 23ம் தேதி முதல், அக்., 22ம் தேதி வரை, பல்வேறு நிலைகளில், பள்ளி மாணவர்களுக்கிடையே சதுரங்கப் போட்டிகளை நடத்த வேண்டும்" என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.




போராட்டம் அறிவிப்பு

          இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும் பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்யக்கோரியும் TNPTF 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் அறிவிப்பு


போலி சான்­றிதழ் மாந­க­ராட்சி ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்ய பரி­சீ­லனை


             போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மாந­கராட்சி இடை­நிலை ஆசி­ரி­யர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்­பட உள்­ளனர். இதற்­கான நட­வ­டிக்கையில் மாந­க­ராட்சி தீவி­ர­மாக களம் இறங்­கி­யுள்­ளது.

 

கனவு ஆசிரியர்


          சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வானொலிக்குச் செல்லும் பேருந்துப் பயணத்தின்போது படித்த நூலைப்பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவல் எழுந்தது. உடனே அந்த ஆவலையே அறிவிப்பாகப் பதிவும் செய்தேன். ஆனால் எழுத அவகாசம் இல்லாமல் போனதால், தாமதம் காரணமாக, வாசிக்கும்போது தோன்றிய சிந்தனைகள் எல்லாம் மங்கி விட்டன. இருந்தாலும் முயற்சிக்க வேண்டும், பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் என்று தோன்றியதால் எழுதத் தலைப்பட்டேன்.





"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரிவிக்கலாம்": கலெக்டர் அறிவிப்பு - நாளிதழ் செய்தி


             அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 203 மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தலைமை வகித்து பேசியதாவது:





இறுதியானது பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம்


          பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம், இறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை, விரைவில், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.

3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

           100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது.


தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யக் கோரி வழக்கு


               தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


இரட்டைப்பட்டம் - வழக்கு உண்மை நிலை - ஓர் விளக்கம்


               இரட்டைப்படம் வழக்கு 1.8.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்அமர்வில் தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது இரட்டைப்பட்டம் முடித்தவர்களின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் 4வாரம் அவகாசம் கேட்டதாகவும் அதனை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் தவறான தகவல்கள் திட்டமிட்டு சில ஆசிரியர்களால் பரப்பப்பட்டதாக திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.


ஆதார் அட்டை பிழைகளை ஆன்லைனிலேயே சரி செய்யலாம்!


             ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி : தோல்வியை குறைக்க அதிரடி நடவடிக்கை


             பிளஸ் 2 தேர்வில், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில், மாணவர்கள் அதிகளவில், தோல்வி அடைவதை தவிர்க்கும் வகையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.



ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு


             ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 


பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 94 சதவீதம்

          பி.எட்., படிப்பு தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்


        பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.


ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச விடைகளில் குளறுபடி - நாளிதழ் செய்தி


      முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட நிலையில், அதில் ஏராளமான தவறுகள் உள்ளன.


பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா? ஐகோர்ட் நோட்டீஸ்


         தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.



கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...


           ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வி உதவித்தொகை திட்டத்தில் வருமான உச்சவரம்பு அதிகரிப்பு


          பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மாணவர் குடும்பத்தின் வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு சேவை மனப்பான்மை அவசியம்: சிபிசிஐடி., டிஐஜி.

          பாபநாசத்தில் ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. 
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை சிபிசிஐடி டிஐஜி., ஜான் நிக்கல்சன் பேசுகையில்,

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive