Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th English - Unit 6 - Book Back Questions

12th Physics - Unit 4 - Study Material


10th Maths - Question Paper

10th Science - Important 2 Marks and 5 Marks Questions

6th Tamil - Term 2 - Study Material

PG TRB English - Multiple Choice Questions with Answer Key

7th Tamil - Term 2 - Study Material

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.10.2025

 

கவிஞர் புலமைப்பித்தன்


 






திருக்குறள்: 

குறள் 681: அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு விளக்க உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

பழமொழி :

Success tastes sweeter after struggle.

 போராட்டத்திற்குப் பிறகு பெறும் வெற்றி மிகவும் இனிப்பாக இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்.

2.சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சிப்பேன்.

பொன்மொழி :

என்றும் நினைவில் கொள்.மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது - கார்ல் மார்க்ஸ் 

பொது அறிவு : 

01. நமது உடலின் ஆக்சிஜன் படகு என்று அழைக்கப்படுவது எது? 

  ஹீமோகுளோபின்(Hemoglobin)

02. இந்தியாவில் செம்பு அதிகம் கிடைக்கும் மாநிலம் எது? 

           ராஜஸ்தான்(Rajasthan )

English words :

Take up - start a hobby or something: ஏதோ ஒரு காரியம் அல்லது ஒரு பொழுது போக்கு அம்சம் தொடங்குதல்

தமிழ் இலக்கணம்

ஒற்றெழுத்து விதிகள் என்பவை தமிழில் இரண்டு சொற்கள் இணையும்போது சில வல்லின மெய்கள் (க், ச், த், ப்) மிகுந்து வரும் அல்லது இயல்பாக இருக்கும் என்னும் இலக்கண விதியாகும்.


1.நிலைமொழியில் உயிர்: முதல் சொல்லின் இறுதியில் உயிர் எழுத்து வந்து, இரண்டாம் சொல்லின் முதலில் 'க', 'ச', 'த', 'ப' வந்தால், வல்லினம் மிகுந்து வரும். 

எ.கா: பள்ளி + கூடம் = பள்ளிக்கூடம்

அறிவியல் களஞ்சியம் :

 புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் 'ஆஸ்பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்' எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

அக்டோபர் 06

புலமைப்பித்தன்  அவர்களின் நினைவுநாள்  



புலமைப்பித்தன் (Pulamaipithan, அக்டோபர் 6, 1935 - செப்டம்பர் 8, 2021) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.  புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை நான்கு முறை பெற்றிருக்கும் புலமைப்பித்தன், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் அலங்கரித்திருக்கிறார்.

நீதிக்கதை

 குரு சொன்ன அறிவுரை


ஒரு நாட்டின் மன்னர் தனது மகனை குருகுலத்திற்கு கல்வி கற்க அனுப்பி வைத்தார். அவனும் குருகுலத்தில் மன்னர் மகன் என்ற அகந்தையை விடுத்து அனைத்து சீடர்களுடனும் ஒற்றுமையாக பழகி வந்தான். குரு சொல்லும் அனைத்து கட்டளைகளையும் மிகுந்த பணிவுடன் செய்து வந்தான். இப்படியே குருகுலத்தில் பல ஆண்டுகளாக கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் கல்வி பயின்று முடித்து தன்னுடைய அரண்மனைக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. 


மன்னரின் மகன் குருகுலத்தில் இருந்து விடைபெற்று தன் நாட்டிற்கு செல்லும் முன் குருவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றான். அப்போது மன்னரின் மகனைப் பார்த்து, குரு, நீ முறம் மாதிரி இரு! சல்லடை மாதிரி இருக்காதே!! என்று அறிவுரை கூறினார். மன்னனின் மகனும், சரி சுவாமி! நான் முறமாகவே இருக்கிறேன் என்றான்.


இதன் பொருள் என்னவென்று மன்னனுக்கு புரியவில்லை. தன் மகனிடம் கேட்டார் மன்னர். அதற்கு அவருடைய மகன், சல்லடை, நல்ல விஷயங்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு, தேவையில்லாத கழிவுகளையும், கல்லையும் மண்ணையும் தான் வைத்துக் கொள்ளும். ஆனால் முறமோ, பதர், கல், மண் போன்றவற்றைக் கீழேத் தள்ளிவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும். இது தான் குரு சொன்ன அறிவுரை என்று கூறினான். குரு கூறிய அறிவுரைப்படியே மன்னரின் மகன் கடைப்பிடிக்கலானான்.


நீதி :

நல்ல விஷயங்களை மட்டும் மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

06.10.2025


⭐சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- 18 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு

⭐இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் அவசர ஆலோசனை

⭐வங்கதேச இறக்குமதி குறைந்ததால் உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரிப்பு

⭐நேபாளில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு - 47 பேர் உயிரிழப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

🏀 இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி இடையே ஒரு முக்கியமான 2026 உலகக் கோப்பை முன்னிலை பெற்ற கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

Today's Headlines

⭐ In and around Chennai for Diwali security arrangements are intensified, 18 thousand policemen were  on duty in supervising the city 

⭐ Union Health Ministry discussing  urgently  on child deaths by cough medicine.

⭐Demand for Tirupur garments in domestic markets increases as Bangladeshi imports declined

 ⭐47 people died due to heavy rains, floods, landslides in Nepal 

 *SPORTS NEWS* 

🏀 The World Cup cricket match is underway between India and Australia. 

🏀 An important 2026 World Cup qualifying football match is taking place between England and Germany.

Covai women ICT_போதிமரம்

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive