Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"முழு சுகாதார தமிழகம்" தொடர்பான ஒன்றிய அளவிலான கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில்கோவை மாவட்டம்- மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்.

        தமிழக அரசு  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறையின் மூலமாக"முழு சுகாதார தமிழகம்" ன்றஇயக்கத்தினை  ஆரம்பித்து, அதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிஇல்லம்மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ளவும் மற்றும் சுத்தமான உணவுகுடிநீர் ,சுகாதாரமா கழிப்பிடம் மற்றும் தன்சுத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான ஓவிய ,பேச்சு ,கட்டுரை போன்றபோட்டிகளை மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம்  மூலமாக  பள்ளிவட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தி வருகிறது.
 
   அதன் ஒரு பகுதியாக நேற்று(12-01-15)  மேட்டுப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் மேட்டுப்பாளையம் வட்டார வள மையத்தில்நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்  கலந்து கொண்டமூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேரும், தாம் கலந்து கொண்ட 5 போட்டிகளிலும் முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பேச்சுப் போட்டி (6,7 &8 வகுப்புகள் பிரிவு)
                               முதலிடம்:செ.லோகேஸ்வரன்,எட்டாம் வகுப்பு
                               
கட்டுரைப் போட்டி (6,7 &8 வகுப்புகள் பிரிவு)
                                   முதலிடம்:  ந.ர.காவ்யா,ஏழாம் வகுப்பு
                                    
ஓவியப் போட்டி (6,7 &8 வகுப்புகள் பிரிவு)
                               இரண்டாமிடம்:ர.நவீன்,ஏழாம் வகுப்பு
 பேச்சுப் போட்டி (4 &5 வகுப்புகள் பிரிவு)
                               இரண்டாமிடம்:வே.சீனிவாசன்,ஐந்தாம் வகுப்பு
 ஓவியப் போட்டி (1,2 &3 வகுப்புகள் பிரிவு)
                               இரண்டாமிடம்:ர.விஜய்,மூன்றாம் வகுப்பு                                                         
 பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் புத்தகங்களை பரிசளித்து பாராட்டினர்.
புகைப்படக் குறிப்பு:
                      பரிசு பெற்ற மாணவர்களுடன் பள்ளியின் ஆசிரியர்கள்  (இடமிருந்து வலமாக) திருமுருகன், அங்கையற்கண்ணி, முனியம்மாள், தலைமையாசிரியை பத்திரம்மாள்,பிரேமாள்,அமுதா மற்றும் ரவிக்குமார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive