Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தவறாக பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசி்ரியர்களின் இன்றைய நிலை

     மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு அம்மா, எங்கள் தாயை விட உங்களை மேலானாவர் என்று எண்ணி இந்த கடிதத்தை உங்களுக்கு சமர்பிக்கின்றோம். ஏனென்றால் எங்கள் தாய் எங்களுக்கு உயிர் கொடுத்தால் அந்த உயிரை பாதுக்காக்க உங்களால்தான் முடியும்.

      நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம்.

நாங்கள் கடந்த 1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்தோம்.

அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டார்கள்.

இப்போது அவர்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவர்கள் வேற வேலையும் செய்து பிழைக்க வழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள்.  இப்போது வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் உள்ளோம். 

நாங்கள இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறவில்லை என்று எங்களிடம் பேச கூட பள்ளிக்கல்வித்துறை தயங்குகிறது.

முதல் தேர்வு :-

 652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம். எங்களின் வேலை திறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும் 2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது. ஆசிரியர் தேர்வு செய்த தவறுக்கு நாங்கள் பழியாகி விட்டோம்.

 இரண்டாவது தேர்வு :-

பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம். இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடி) யில் உள்ள கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள் முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில் ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.

7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கி விட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்று கண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள்,  அந்த 20 தவறான கேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.

நாங்களும் ஆசிரியர்கள்தான் அம்மா,  நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் , மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்று கூறி மதிபெண் போட வைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்கு எப்படி கழிக்க முடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.

 ** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.

** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.

** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
** தற்போது மாற்றுத் திறனாளிகள் தேர்வில் கூட தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடபட்டுள்ளது.

நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான், நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்து விட்டார்கள்.

மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை. நாய், பசு போன்று அணைத்து ஆடு, கோழியையும் பார்க்க வேண்டும் அதை கொன்று சாப்பிடக்கூடாது என்று கூறும் நாம் , மற்ற மனிதர்களை போல் எங்களை பார்க்க வில்லை 

 ஒரு முக்கிய செய்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்களை வேலையில் இருந்து தூக்கிய செய்தி தெரியவே தெரியாது, தெரியாமல் மறைத்து விட்டார்கள் கல்வி அலுவலர்கள். அம்மா அவர்கள் இதில் தலையிட்டு இவர்களின் இறப்பை தடுக்க வேண்டும். அம்மா இவர்கள் அணைவரும் மனம் நொந்து உள்ளார்கள், வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடைக்கிறார்கள். ஆதலால் அம்மா அவர்கள் தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவே எங்களையும் பாதுகாக்க வழிசெய்ய

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்களை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும் எங்களுக்கு மனம் இல்லை பணமும் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம் அம்மா.

அம்மா இடிபாடுகளில் சிக்கிவர்களை ஆதரிக்கும் உங்கள் நல்ல உள்ளம், ஈராக்கில் தவிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் உங்கள் நல்ல உள்ளம், மீனவர்களை காக்க உறுதி செய்யும் உங்கள் நல்ல உள்ளம் எங்களையும் காக்க வழி செய்ய வேண்டும்.  அம்மா நாங்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளோம் அம்மா, எங்கள் வாழ்வை காப்பாற்ற உங்களால்தான் முடியும் அம்மா, அம்மா நாங்கள் என்றும் உங்களை வழியில் இருப்போம் அம்மா நன்றி அம்மா.

ஆசிரியர் தேர்வு வாரியம்  இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம் அம்மா, 



இப்படிக்கு .

 கணினி ஆசிரியர்கள்




24 Comments:

  1. இதை எழுதியவர் எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். நானும் 652 கணினி ஆசிரியர்களின் ஒருவர்தான். நாம் என்றும ஒன்றாக கூடியதில்லை. நாம் ஒன்றாக கூடினால் நிச்ச்யமாக நமக்கு வேலை கிடைக்கும். பாடசாலை ஆசிரியருக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. நான் ஒரு சமூக ஆர்வலர். உங்களை வேலையில் இருந்து தூக்கிவர்கள் என்றும் நல்லா இருக்க போவதில்லை. ஒருத்தரை கொன்று ஒருத்தர் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்லது அல்ல. இதற்கு உங்களை வேலையில் இருந்து தூக்க காரணமாக இருந்த பி.எட சங்க நிர்வாகிகள் ஒரு போதும் மேலே வர முடியாது. இது அரசிற்கும் தெரியும். நீங்களே கோர்டில் வென்றாலும் உங்களை அரசு வேலையில் நியமிக்கபோவதில்லை. நீங்கள் எப்போதும் நீங்களும் வேலைக்கு போகமால் , 20000 பி.எட் படித்த பட்டதாரிகளையும் வேலைக்கு செல்லவிடாமல் ஒவ்வொருரிடம் 1000 ரூபாய் சங்கத்தில் சேர வாங்குவதற்காக வழக்கு தொடர நினைக்கும் பி.எட் சங்கத்திற்கு எச்சரிக்கை. நீங்களும் வரமுடியாமல் , பி.எட் படித்தவர்களு்ம் வரமுடியாமல் தடுக்காதீர்கள். உங்கள் சங்க தலைவர் சந்திர வாணன், குணவதி அணைவ்ரும் உங்களிடம் 1000, 2000 வாங்கி குடும்பம் நடத்துகிறார்கள். நீங்களும் நம்பி ஏமாறதீர்கள். 652 கணினி ஆசிரியர்களை விட்டு விடுங்கள் பாவம். அவர்கள் வாழ்க்கையில் விளையாடதீர்கள். இப்போது இரு கணினி ஆசிரியர்கள் இறந்து விட்டனர். மதுரையில் ஒரு ஆசிரியையின் பையன் இறந்து விட்டான். தயவுசெய்து இன்று 650 பேரையும் கொல்ல நினைக்காதீர்கள். நீங்கள் நல்லா இருக்க வேண்டும்

    ReplyDelete
  3. vettriarasan7/01/2014 10:13 pm

    பாவம் கணனி ஆசிரியர்கள். அது சரி. வேலை கொடுப்பதும் கொடுக்காததும் உங்களை பொறுத்தது. ஆனால் சட்டதின் முன் அனைவரும் சமம். டி.என்.பி.எஸ்.ஸி 2005 ,குரூப் 1 தேர்வில் எடுதத முடிவே நமக்கு சாதகம். ஆசிரிய்ருக்கு தகுதியில்லை என நம்மை அனுப்பிய வீட்டுக்கு அனுப்பினார்கல்.ஆனால் தகுதியில்லாத நாம் நம்மிடம் கண்னி ப்யின்ற மேல்நிலை படித்துமுடித்தவ்ர்களும் தகுதியில்லாதவர்கள் தானே? என்வே சுப்ரீம் கோர்ட் டி.என்.பி.எஸ்.ஸிக்கு வழ்ங்கிய் மாதிரியே நம்மிடம் பயின்ற அனைவரையும் தகுதி இழந்தாக அறிவிக்க வேண்டும்.
    டி.என்.பி.எஸ்.சி., தேர்வு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
    கடந்த, 2005ல், தமிழக அரசு பணியாளர்தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் -1 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த ஐகோர்ட், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற, 83 பேரின் தேர்வை ரத்து செய்ததுடன், முறைகேடு நடந்ததையும் உறுதி செய்தது. இதையடுத்து, தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தேர்வை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்து, நேற்று தீர்ப்பளித்தது. இதன்படி, தமிழகத்தில் 83 டி.ஆர்.ஓ.,க்கள் பதவி இழக்கின்றனர்.

    ReplyDelete
  4. Kandippaga namakku velai undu.

    ReplyDelete
  5. Sir arasu & aided palliyil paniyatrakodiya teachergalukku 5 andirkku orumurai TET thervai pola test vaithal palli sirakkum , manavargal mempaduvargal pls pls pls arasu pariselanai seiya vendum pls pls pls.

    ReplyDelete
  6. கனினி ஆசிாியா்களே. நாங்கள் எல்லாம் 15 வருடங்களுக்கு முன்னா் பி.எஸ்சி. கணிணி அறிவியல் படித்து பி.எட் படித்து காத்திருக்க சும்மா PTA வுல போய் வேலை பாா்த்த உங்கள பணி நிரந்தரம் செய்ததே தப்பு . அந்த தப்ப அரசு திருத்திகொண்டு உங்களுக்கு பாிட்சை வைத்து அத நீங்க பாஸ் பன்ன முடியாம உங்கள வீட்டுக்கு அனுப்புனா திருப்பி வேலை கேட்டு அம்மா அம்மா ன்னு ஐஸ் வைக்கிறீங்களே. உங்களுக்கே இது ஓவரா தொியல

    ReplyDelete
    Replies
    1. Hello why don't you work in school by PTA.we have completed computer science degree before 15 years. Before comments ,you will write TRB exam and asked another.

      Delete
  7. vettriarasan7/02/2014 3:41 pm

    கண்னி அறிவியல் ப்டித்து ஏன் பி.எட் செய்தீங்க? எம்.ஸிஏ படித்து ஜ்.டி.துறையில் பணிக்கு போயிருந்தா நல்லா சம்பாதித்திருபீங்க். எங்களை பி.டி.ஏ வில் அரசு நிரந்தரம் செய்தது தப்பு என் நீங்க் சொன்னா கல்வித்துறை செய்ததுத்ப்புதானே.? என்வே நிரந்தர செய்த இயக்குனரை வீட்டுக்கு போக சொல்லலும் என்று மறைமுகமாக எங்களை ஏன் ஜ்ஸ்,ஸ்பைஸ் என ஓவரா சொல்வது சரியில்லமா. இலலையன்னா எங்களை பணியில் சேர்த்துட்டு உங்கலை எங்களுக்கு உத்வியா உட்னடியா போட்டா , நாங்க் இன்னும் கொஞ்ச நாள்ல் ரிட்டர்டைடு ஆயிடுவோ. அப்ப நீங்க் சீனியரா இருப்பீங்க. எனவே அவங்களுக்கு உத்வியா எங்களை போடுங்க என கேட்பது ஞாயம்தானே/

    ReplyDelete
  8. போன 2013-14 கல்வியாண்டில் நீங்கள் 652ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் படிக்காமல போனர்கள். நீங்கள் பணியாற்றிய பள்ளிகளில் அதிக தேர்ச்சி விழுக்காடு 13-14 கல்வியாண்டில்தான் மாஜி கணினி ஆசான்களே. வேற வேலைய பார்க்க ஆறபிங்கய்யா. எல்லோறையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.

    ReplyDelete
    Replies
    1. Hello who are you .you dont know ,Computer science results in decreased in govt school.we wiil entering to government service.you will try to another job

      Delete
  9. 50 % to 35 %

    2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்று சொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை எங்களை தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டீர்கள் என்று கூறி அரசு வேலையில் கணினி பயிற்றுநராக அமர செய்தார்கள்.

    "நீங்கள் கேட்காமல் அவர்களே முடிவு செய்து விட்டார்கள் ! "

    அன்றைக்கே நீங்கள் வீட்டுக்கு போயிருக்க வேண்டும். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் உண்மையிலேயே தகுதி உடையவர்களா என்று?

    பணம் கொடுத்து, ஆட்சியாளர்களிடம் பிச்சை வாங்கி பின் கதவு வழியாக வந்தவர்கள்தானே நீங்கள்? .... வேற வேலைய பார்க்க ஆரம்பிங்கப்பா.....
    "தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் !"

    ReplyDelete
  10. 14 வருடங்களாக அரசு கணிணி ஆசிரியராக பணியாற்றிய இந்த 652 பேரும் (இவர்களுக்கு மட்டுமே)அரசு நடத்திய இரண்டு சிறப்பு தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கலாமே?

    வெளியே B.Ed., முடித்துவிட்டு ஒரு பெரிய கூட்டம் காத்திருக்க... அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல்....

    டெண்டர் இல் பணி செய்த உங்களுக்கு மட்டுமே இரண்டு வாய்ப்பு கொடுத்ததே அதிகம்.

    டெண்டரில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லையே?

    ஏன்யா நீங்கலாம் புத்திசாலினா, உங்க கூடவே பரிட்சை எழுதி பாஸ் பன்ன 1100 Teachers ம் முட்டாள்களா?

    ReplyDelete
    Replies
    1. Vaangappa ,neenga mattumthan tamilnatula arivu jeevan. Ungal sevai engalukku romba vendum.

      Delete
  11. 656 Perukku kandippa velai kidaikkanum ...

    ReplyDelete
  12. B.Ed C S Graduate...7/02/2014 6:49 pm

    B.Ed Computer Science Association,
    We 652 eligible candidates are fighting for our rights, while they are for their own. So please don't try to respond to status given by the failed 652 Candidates...
    Thank u...

    ReplyDelete
  13. Bed teachers ellam theramaiyanavanga. Eny degree with pgdca mudicha ungalaiye 50% vanganathan elegible sollaranga. Muzhusa bsc bed computer science mudicha engalukku atleast 75% vatchi examla select pannathan enga therama therium .manbumigu amma enga theramia sothitchu velakudunga. Enna nanga patichi 15 varusham atchi engalla theramiya nirubikanumna ecam vendum engalukku..

    ReplyDelete
  14. Amma 15000 mela nanga erukkom theramiyanavargalukku vaippu kodunga exam moolam select pannunga amma .

    ReplyDelete
  15. Manbumigu amma 6 varudangalaka postinge ellama pannitanga bed associationla erukkara vaiyasanavanga. Case casenu senioritynu governmentaiye seyalpadama schoola computer teachers ellama govt. Kettapera vanga vetchanga. Posting podama thaduthitu government karanamnu sonnanga. Vote kuda Noto podasonnanga. Amma evanga panna seyallam therium ungalukku exam moolam select panunga .

    ReplyDelete
  16. Engal vottu NOTO virku.amma venumna parunga enga bed computer teachers face book accountla nanga panna vilambaram erukkum . Nenga velaiya kodukkalana nanga courtuku povom.

    ReplyDelete
  17. Ammava mirattura thairiyam bed karangalukku eppadi vanthathu. Gunavathi ya illa nalinichidambarama. Bed associatin thannoda azhiva thedikuchi. Kandippa ungalukku athan palan theriyum. Ammanna summava.

    ReplyDelete
  18. vettriarasan7/04/2014 8:03 pm

    மறுபடியும் தேர்வு வையுங்கள் அம்மா. நாங்க எழுதுறோம். ஆனா பழைய கண்னி ஆசிரியருக்கு 50% பி.எட் முடிச்சவலுக்கு 80% பாஸ் மார்க் வைத்து எங்களை வாழவிடுங்கள். பி.எட் ப்டிச்ச கண்னி ஆசிர்யர்கள் நோட்டோ வை அழுத்தரதா வும், பேஸ்புக்ல சொன்னா எல்லா செய்வாங்களாவும்.? அனைவருக்கும் தேர்வு, பழைய், புதிய க்ணினி ஆசிரியருகு முறையே 50%,80% மார்க் நிர்ணயம் செய்யுங்க்ள். மாத சம்பளம் நோட்டாவரும்.

    ReplyDelete
  19. ஹலோ, நீங்கள் இருதரப்பினரும் இப்படியே வழக்கு,வழக்குன்னு போய்கிட்டெ இருந்தீங்கன்னா எப்பவும் தீர்வு வராது.ஒழுங்கா போய் படிங்க. அரசு தேர்வு எப்படி வைத்தாலும் அதை எதிர்கொள்ள தயார் ஆகுங்க.

    ReplyDelete
  20. All the above problem solved when TET Computer Science exam only.

    ReplyDelete
  21. நாள் ஒரு அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இளம் பி.எட் பட்டதாரிகளே எல்லா பாடங்களுக்கும் இப்படிதான் ஒருவரை வெளியே அனுப்பி ஒருவர் வேலைக்கு போகவேண்டும் என்று நினைக்கிறார்களா. இந்த கணினி பி.எட் ஆசிரியர்கள் மட்டும் ஏன் இப்படி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் இந்த 652 பணியிடம்தான் உள்ளதா. நீங்கள் வேண்டும் என்றால் புதுபணியிடம் கேளுங்கள். அரசு மட்டும் 652 பேரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் தலைமை ஆசரியர்கள், முதுகலை ஆசரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என் அணைத்து சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவோம். ஏன் ஒரு வருடம் பொறுத்து இருந்தோம் என்றால் வழக்கு இருந்த்தால் தான்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive