Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாளை கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம்

         கூடுவாஞ்சேரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
 
        இந்த முகாமில், 6-ஆம் வகுப்பு முதல் பள்ளியில் இடைநிறுத்தம் செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற, பெறாதவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டோர் கலந்து கொள்ளலாம். இதில் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.

எனவே, வேலைவாய்ப்பற்றோர், இன்டிமேட் பேஷன் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றில் அசல், நகலுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் புகைப்படமும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive