NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மிகப் பெருமழை: 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!




தமிழகத்தில் மலைப்பகுதி மாவட்டங்களான கோவை உட்பட 5 மாவட்டங்களில் மிகப் பெருமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (ஆகஸ்ட்,14) மாலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த பகுதி சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதுமேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், மேற்கு திசைக்காற்றின் வலு மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மலைப்பகுதிகள் அடங்கிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பெருமழை முதல் மிகப் பெருமழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், “வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் வடக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive