Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.07.26

 

யஷ் பால்
 




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:46 சிற்றினம் சேராமை

குறள் எண்:457

குறள்:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

பொருள்:

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.

பழமொழி :

Good beginning makes a good ending.

நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. பொது அறிவு மற்றும் நற்பண்புகளால் என்னை நான் உயர்த்திக் கொள்வேன். 

2. என் பெற்றோரையும் ஆசிரியர்களையும் துன்புறுத்தும் எந்த ஒரு செயலையும் நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி : 

வீழ்வது தோல்வி அல்ல; மீண்டும் எழாமல் இருப்பதே தோல்வி.

Thought for the Day :

Falling is not failure; refusing to rise again is.

பொது அறிவு : 

1.உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய நாடு எது? 

ரோம். 

2.இந்தியாவின் முதல் முறையான சூரியசக்தி விமான நிலையம் எது? 

கொச்சின், கேரளா.

English words :

Remarkable - Worth noticing; extraordinary, குறிப்பிடத்தக்க / அசாதாரணமான. 

Acquire – Obtain, பெறு.

புவியியலும் சுற்றுசூழலும் :

இது உள்ளாட்சி அமைப்புகளில் மிகவும் அடிப்படையானது.

கிராம நிர்வாகத்தின் முக்கிய அமைப்புகள்

1. கிராம சபை

18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் கிராம சபை உறுப்பினர்கள் ஆவர்

NMMS :

MAT 

கொடுக்கப்பட்டுள்ள படங்களில் வேறுபட்டதைத் தேர்ந்தெடு 



விடை: (1)

ஜூலை 24

யஷ் பால் அவர்களின் நினைவுநாள்

யஷ் பால் (Yash Pal, 26 நவம்பர் 1926 - 24 சூலை 2017) இந்திய அறிவியலாளர் ஆவார்.இவர் விண்வெளிக் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் முதலில் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தில் பணியைத் தொடங்கி, பின்னர் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவில் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

அறிவியலின் வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் இவருக்கு கலிங்கா விருதை வழங்கிச் சிறப்பித்தது.

இந்திய அரசின் பத்ம பூசண் விருதை 1976ஆம் ஆண்டில் பெற்றார்.

2013ஆம் ஆண்டில், பத்ம விபூசண் விருதைப் பெற்றார்.

நீதிக்கதை

  "வெற்றி மட்டும் இலக்கு அல்ல"


ஒரு பள்ளியில் அம்பிகா மற்றும் அருணன் என்ற இரு மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். பள்ளியில் ஓவியம், ஓட்டப்பந்தயம், பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெறவிருந்தன.


அம்பிகா, "நான் வெற்றி பெறவில்லை என்றால் என்ன செய்வேன்?" என்று பயந்து எந்தப் போட்டியிலும் பெயர் பதிவு செய்யவில்லை.


ஆனால் அருணன், "வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்றாலும் புதிய அனுபவம் கிடைக்கும்" என்று நினைத்து மூன்று போட்டிகளில் பங்கேற்றான்.


போட்டி நாளில் அருணன் ஓட்டப்பந்தயத்தில் தோற்றான். ஆனால் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசும், ஓவியப் போட்டியில் சிறப்புப் பரிசும் பெற்றான். அதைவிட முக்கியமாக, அவனுக்கு தன்னம்பிக்கை, புதிய நண்பர்கள், மேடையில் பேசும் துணிச்சல் ஆகியவை கிடைத்தன.


இதைப் பார்த்த அம்பிகா, "நான் பயத்தால் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக போட்டிகளில் பங்கேற்பேன்" என்று முடிவு செய்தாள்.


நீதி:


போட்டிகளில் பங்கேற்பது வெற்றிக்காக மட்டுமல்ல; தன்னம்பிக்கை, திறமை, அனுபவம் மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும்.


இன்றைய செய்திகள்

24.07.2026

🗒️டெல்லி கனாட் பிளேஸில் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம் , அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு.

🗒️நாமக்கல்- அரியலூர் இடையே 
புதிய ரெயில் பாதை அமைப்பது குறித்த விரிவான செயல்திட்டம் குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியள்ளார்.

🗒️அட்லாண்டிக் பெருங்கடலில் 74 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் மூழ்கிய  விமானத்தின் பாகங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டுச் செய்திகள்

🏀காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த லவ்லினா.

 🏀கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

Today's Headlines

🗒️ The NEET protest is becoming stronger at Connaught Place in Delhi. All shops have been ordered to close.

🗒️ Railway Minister Ashwini Vaishnaw said that approval has been given to prepare a detailed project report for a new railway line between Namakkal and Ariyalur.

🗒️ Parts of an airplane that crashed into the Atlantic Ocean 74 years ago have now been discovered.

Sports News

🏀 Commonwealth Games: Lovlina has assured India's first medal in the competition.

🏀 Cricket: India defeated Zimbabwe. Vaibhav Suryavanshi played brilliantly and scored a half-century.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive