![]() |
| பன்னாட்டுப் புலி நாள் |
Hitch your wagon to a star
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன்.
2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.
பொன்மொழி :
தடைகள் வந்தால் நின்றுவிடாதே; அவற்றைத் தாண்டிச் செல்ல கற்றுக்கொள்.
Thought for the Day :
When obstacles appear, don't stop. Learn to overcome them.
பொது அறிவு :
1. அஞ்சல் தலை (STAMP) பற்றி படிக்கும் படிப்பின் பெயர் என்ன?
பிலாடலி (PHILATELY).
2. இந்தியாவில் முதன் முதலில் அஞ்சல் தலை வெளியானது எப்போது?
மே 6, 1854.
English words :
Wise - Having good judgment, அறிவார்ந்த.
Polite - Having good manners, மரியாதையான
புவியியலும் சுற்றுசூழலும் :
கீழ்கண்டவைகள் இந்தியாவின் முக்கிய புவியியல் பிரிவுகள் ஆகும்.
1. வடக்கு மலைப் பகுதி – இமயமலைத் தொடர்
2. வட இந்திய சமவெளி – கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகளால் உருவான வளமான சமவெளி
3. தீபகற்ப பீடபூமி – இந்தியாவின் பழமையான பாறைப் பகுதி
4. கடலோரச் சமவெளிகள் – கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகள்
5. தீவுகள் – அந்தமான்–நிக்கோபார் மற்றும் இலட்சத்தீவுகள்
NMMS :
MAT
பச்சைக் காய்கறிகள் மற்றும் உணவுப்பொருள்கள் சமைக்கப்படும் நிகழ்வு கீழ்க்காணும் எவ்வகை வினையைச் சேர்ந்தது?
(1) மின்னாற் பகுத்தல்
(2) வெப்பச்சிதைவு
(3) ஒளி வேதி வினைகள்
(4) வினைவேக மாற்றி வினைகள்
விடை: (2) வெப்பச்சிதைவு
ஜூலை 29
நீதிக்கதை
"மலரும் மண்ணும்"
ஒரு கிராமத்தில் ராகுல், விஷால் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.
பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செடி கொடுத்து வளர்க்க ஆசிரியர் கூறினார்.
ராகுலுக்கு தோட்ட வேலை பிடிக்காது. ஆனால் ஆசிரியர் சொன்னதால் மட்டும் தினமும் விருப்பமில்லாமல் செடிக்கு தண்ணர் ஊற்றினான். சில நாட்களில் அதை மறந்துவிடுவான். "ஆசிரியர் சொன்னதால் செய்கிறேன், அதுவே போதும்" என்று எண்ணினான்.
விஷால் மட்டும், "இந்தச் செடி நன்றாக வளர வேண்டும். இது நிழலும் காற்றும் தரும்" என்று மனமார விரும்பி தினமும் அன்புடன் தண்ணர் ஊற்றி, களைகளை அகற்றி, கவனமாக வளர்த்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு, ராகுலின் செடி வாடிப்போனது. ஆனால் விஷாலின் செடி பசுமையாக வளர்ந்து மலர்களால் குலுங்கியது.
அதைப் பார்த்த ஆசிரியர் கூறினார்:
"கட்டாயப்படுத்தி ஒரு செயலை ஆரம்பிக்கலாம். ஆனால் அதை வெற்றிகரமாக முடிக்க முடிவது, அந்தச் செயலை முழு மனதுடன் தன்னார்வமாகச் செய்பவரால்தான்."
நீதி:
எந்தச் செயலையும் பிறர் கட்டாயப்படுத்துவதால் அல்ல, நாமே முழு மனதுடனும் தன்னார்வத்துடனும் செய்தால்தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...