![]() |
| டாக்டர் முத்துலட்சுமி |
இயல் : அரசியல்
அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை
குறள் எண்:461
குறள்:
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
பொருள்:
ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.
Humility often gains more than pride.
அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் என் கடமையை தவறாமல் செய்வேன்.
2. கல்லடிபட்டாலும் கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் பணி செய்ய முயற்சிப்பேன்.
பொன்மொழி :
இன்றைய போராட்டம்தான் நாளைய வெற்றிக்கான அடித்தளம்.
Thought for the Day :
Today's struggle is the foundation of tomorrow's success.
பொது அறிவு :
1. உலகின் மிகப் பெரிய தீவு எது?
கிரீன்லாந்து.
2." தண்ணீர் தேசம்" அல்லது "மிதவை நகரம் " என்றழைக்கப்டும் நகரம் எது?
வெனிஸ் நகரம்.
English words :
Alert - Quick to notice, விழிப்பான.
Direct - Straight to the point, நேரடியான.
புவியியலும் சுற்றுசூழலும் :
கிராம வளர்ச்சி, சாலை, குடிநீர், சுகாதாரம் போன்ற விஷயங்கள் குறித்து கிராம சபையில் ஆலோசிக்கப்படுகிறது.
மக்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும்.
NMMS :
MAT
2000°C வெப்பநிலையில் ______________________% நீரானது சிதைவடைந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களைத் தருகிறது.
(1) 0.02.
(2) 0.2.
(3) 2.
(4) 0.1.
விடை: (1) 0.02
ஜூலை 30
நீதிக்கதை
"அளவான செலவே அமைதியான வாழ்க்கை "
ஒரு சிறிய நகரில் ரமேஷ், லதா என்ற தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ரமேஷுக்கு மாதந்தோறும் கிடை க்கும் வருமானத்தில் குடும்பத்தை சிக்கனமாக நடத்தி வந்தார்.
ஒருநாள் அக்கம்பக்கத்தினர் புதிய கார், விலையுயர்ந்த பொருட்கள் வாங்கியதைப் பார்த்த லதாவுக்கு, "நாமும் அவர்களைப்போல வாழ வேண்டும்" என்ற ஆசை வந்தது. அதனால் தேவையில்லாத பொருட்களை தவணையில் வாங்க ஆரம்பித்தார்கள்.
வீட்டுச் செலவுகளும் அதிகரித்தன. சில மாதங்களில் கடன் பெருகி, மாத இறுதியில் அத்தியாவசிய செலவுகளுக்குக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது.
அப்போது ரமேஷின் தந்தை அவர்களிடம், "வருமானத்தை விட அதிகமாகச் செலவு செய்தால் மனநிம்மதியும் போய்விடும். முதலில் தேவைகளைப் பாருங்கள்; பிறகு ஆசைகளை நிறைவேற்றுங்கள்," என்று அறிவுரை கூறினார்.
அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட ரமேஷும் லதாவும் தேவையற்ற செலவுகளை நிறுத்தி, வருமானத்திற்கே ற்ப செலவு செய்யத் தொடங்கினர். சிறிது சிறிதாக கடன்களை அடைத்து, மீண்டும் நிம்மதியாக வாழ ஆரம்பித்தனர்.
நீதி:
வருமானத்திற்குத் தகுந்தபடி செலவு செய்தால் வாழ்க்கை வளமாகும்.
அகலக்கால் வைத்தால் கடனும் கவலையும் மட்டுமே பெருகும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...