Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்

           பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என,எதிர்பார்க்கப்படுகிறது.
 
          பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.




40 Comments:

  1. Intha weightage muraiyyal pathikka pattavargalukku ivvalavu porattam nadathiyum yentha pathilum sollamal pani niyamana aanai valangukirarara?
    Ithu makkal aatchiya illai mannar aatchiya?
    Selection list publish poluthu kooda, neethimantra theerpirku utpattae paniniyamanam yena kurippidapattirunthathu!
    Anyway intha asiriyar paniyai nambi pirakka villai....
    Selection list'lil name illathavargal varuthapadavaendam....
    1 or 2 markkil chance miss seithavargal adutha tettirku prepare pannungal....
    >2 markil miss seithavargal thayavuseithu
    Meendum tetkku meeendum prepare pannatheergal....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கலை ராஜா சாியாக சொன்னீா்கள். தமிழ்நாட்டில் தற்போது நடப்பது மக்களாட்சியே இல்லை. நீங்கள் சொல்வது போல டிஇடி க்கு படிப்பதை விட்டுவிட்டு வேறு வேலையை பாா்பதே மேல். ஆனால் ஒன்று இதற்கு காரணமானவா் யாா் என்று அனைவருக்கும் தொியும் அவா்கள். நன்றாக இருக்கட்டும்....

      Delete
    3. வேதனை, மனதை கொல்லுகிறது தினேஷ்

      Delete
    4. "நான் இளைஞனாக இருந்தபோது பத்து காரியங்கள்

      செய்தால் அதில் ஒன்பது தோல்வி அடைவதைப்

      பார்த்தேன்.

      என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை

      நான் விரும்பவில்லை. ஒன்பது தடவை

      வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று

      விளங்கியது.

      தொண்ணூறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி

      கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்''

      -பெர்னாட்ஷா.

      Delete
    5. 2004 - SGT Based on District seniority while I'm joining on D.T.Ed
      2007 - after registration in Employment Office Changed to State
      Seniority
      2011 - almost I reached the seniority TET announced
      2012 - only 1hr 30 mins I got 68 & in supplementary I got 88 but
      no relaxation for backward class
      2013 - I got 100 in TET waiting for posting
      2014 - Relaxation announced for backward class AFTER EXAM
      88% in +2, 81% in D.T.Ed & 100 in TET 73.3 weightage no
      placement
      Be proud to be myself for choosing a fantastic field........................
      And my sincere thanks to all pillars for the above changes!

      Delete
  2. This is totally unexpected from our Hon CM especially while there is unrest among deserving eligible TET 2013 candidates projected in Chennai itself. There is no other remedy to Citizens except Court of Law. The Hon High Court Chennai and Madurai may kindly kindly kindly take serious notice and suo moto note of the situation and cause suitable directions to Government to implement natural justice in view of alleged discrepancies in method and selection of candidates by TRB in list 10.8.14. We expect Honour Justices will please please help us in this regard before things getting worse affecting the deserving jobless families.

    Sundar suresh

    ReplyDelete
  3. Anaivarumae intha vaelai kidaithal num valgai tharam uyarum yendrae kanuvugaludan oru varudathirkku maelaga kaththirunthom....
    >100 mark vangiyum selection listil idam paera mudiyatha naangal realy unlucky person....
    At the same time
    selection listil ulla anaivurum talented persons yenpathai yarum marukka mudiyathu..
    Arasanga asiriyar paniyai paerapogum anaithu friendskkum yenathu manamarntha valthukkal...
    Indru muthal ungal valgaiyin anaithu kastangalum neengi santhosamai nimmathiyai vazha yen manamarntha vazhthukkal......

    ReplyDelete
  4. வருந்துகிறோம்: இன்றுடன் 2013 தகுதித்தேர்வு செத்துவிட்டது . & இப்படிக்கு: பாதிக்கப்பட்ட பட்டதாரி & டைநிலை ஆசிரியர்கள்.

    ReplyDelete
    Replies
    1. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
      வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

      இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

      *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
      சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
      உண்ணா விரத போராட்ட முறையோ;
      கிடையாது.. .... .....

      திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
      வெற்றி கிட்டும்...

      பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

      நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

      நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
      இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

      "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
      தெய்வத்தால் ஆகா தெனினும்"

      தொடர்புக்கு. .
      கருப்புசாமி:7200670046

      சத்திய மூர்த்தி 95433 91234.

      Delete
  5. please kindly read and get high marks in TET2014.advance congrats

    ReplyDelete
    Replies
    1. Anbalagan sir, my wife Tet mark: 97,weightage- 67.13 but not selected. so feeling sir

      Delete
  6. அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்..
    ஓர் ஆசிரியராக முதன்முறை ஆசிரியர் தினம் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ஓர் ஆசிரியரின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் படித்ததில் பிடித்ததை உங்களுடன் இந்த நல்ல நாளில் பகிர்ந்து கொள்கிறேன்...

    ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.
    விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.
    ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.
    மாணவர்களுக்குக் கற்பனைத் திறன், நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியம், செயல்களில் முழு ஈடுபாடு, பொறுமை, விடாமுயற்சி, நேர்மறை மனப்பாங்கு போன்றவை அவசியம். இவையனைத்தும் மாணவர்களுக்கு இயற்கையிலேயே பொக்கிஷமாகப் புதைந்திருக்கிறது. அந்தப் புதையலைத் தேடி வெளிக்கொண்டுவரும் வழிவகைகளை ஆசிரியர்கள் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் வாழ்க்கையின் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
    வகுப்பில் பாடம் எடுக்கும்போது மேற்கூரிய பண்புகள் வெளிப்படத் தேவையான நம்பிக்கையை தினமும் போதிக்க வேண்டும். சிறந்த தலைவர்கள், வெற்றியாளர்களின் சரித்திரங்கள், தன்னம்பிக்கைக் கதைகள் என்று கூறி எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்கும் மாணவர்களுக்கு தங்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்களை எப்போதும் விதைக்கும் சூழலே ஏற்படாது. ‘என்னால் எதையும் செய்ய முடியும்’, ‘நான் வெற்றியடைந்தே தீருவேன்’ என்பன போன்ற நேர்மறை எண்ணங்களே அவனது மனதில் வியாபித்திருக்கும். இத்தகைய செய்திகளைச் சொல்லும் ஆசிரியரின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மாணவனுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக மாறிவிடும்.
    தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை ஒரு சிறந்த படைப்பாற்றல் மிக்க தலைமைப் பண்பு கொண்டவனாக மாற்ற வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருக்கிறது என்று உணர்ந்து பொறுப்புடன் கற்றுத்தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமையாகும். மாணவர்களின் கருத்துக்கள் சுதந்திரமாக வெளிவர வேண்டும். அப்போதுதான் புதுப்புது சிந்தனைகள் ஏற்படும். நாளடைவில் அந்த சிந்தனைகள் மனதில் பதிந்து, குறிக்கோளாக மாறி, நல்ல எண்ணங்கள் வழியாக செயல் வடிவமாகும். அதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் ஆசிரியர்களையே, தன் வாழ்வை சிறந்த முறையில் கட்டமைத்தவராக எண்ணி மாணவன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவு கூறுவான்.
    குறிக்கோள்கள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதம் என்பதைப் போல, குறிக்கோள் இல்லாமல் வாழ்க்கை என்றால் என்ன? என்று அறியாமல் தெளிவில்லாத கரடுமுரடான பாதையில் செல்பவனை ஆசிரியர்கள் தான் நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும். மனிதனை அழகான முறையில் செதுக்கி, அனைவராலும் வணங்கப்படும் அழகிய சிலையாக வடிக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் தங்களின் அறிவு, விடாமுயற்சி, ஒழுக்கம் என்ற வரிகளைக் கொண்டு நல்ல சிலையை வடிவமைக்க வேண்டும்.
    கல்வி என்பது அள்ள அள்ளக் குறையாத சொத்து. அதை கொடுக்கக் கொடுக்க வளருமே அன்றி குறையாது. எனவே மாணவர்களுக்கு தாராளமாக நற்பண்புகளுடன் கூடிய கல்வியை வழங்குங்கள். அதைவிடுத்து வியாபாரம் ஆக்காதீர்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி புகட்டுவதை காசு பெற்றுக்கொண்டு, ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவதைப் போல உணருங்கள். காசை வாங்கிக் கொண்டு கல்வி கொடுக்கும் செயல், புனிதமான கல்விக்கு நாம் செய்யும் துரோகம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இறந்த பிறகும் மண்ணில் வாழும் வரிசையில் முதலிடம் பெறும் ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் நாளைய தலைமுறை உங்கள் கையில்….

    நன்றி!

    ReplyDelete
  7. Manasu kastama irukku sir.

    ReplyDelete
  8. Manasu kastama irukku sir.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய தமிழக அரசுக்கு,
    TET தேர்வில் வெற்றிபெற்றும் பாதிக்கப்பட்ட ஒரு சாமனிய மனிதனின் கோடானுகோடி வணக்கங்கள். இந்திய வரலாற்றில் ஒருதேர்வு நடப்பதற்கு முன் அதற்கான தகுதி மதிப்பெண்ணையும் தகுதியும் நிர்ணயிப்பதே இதுவரை நடைமுறையில் இருந்துவந்துள்ளது. ஆனால் தேர்வை நடத்தி முடித்துவிட்டு அதற்கு பிறகு அதற்கான தகுதி மதிப்பெண்ணை மோசடியாக நிர்ணயம் செய்த சிறப்புவாய்ந்த நிகழ்வு இந்தியாவிலேயே நம் மாநிலத்தில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரலாற்றையே மாற்றி எழுதிய பெருமையும் நம் மாநிலத்திற்கே சேரும். இதன் மூலம் TET தேர்வில் வெற்றி பெற்றாலாவது நம் வாழ்வில் ஒளி உண்டாகும் என 20 வருடங்களுக்கு முன் +2முடித்து,DTED முடித்தால் அரசாங்க வேலை கிடைக்கும் என 10 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்த எங்களைப்போன்ற சாமானிய மனிதர்களின் நம்பிக்கையை wheitage முறை என்ற குண்டை வீசி தகர்த்து, இனி எப்போதும் TETல் அதிக மதிப்பெண் பெற்றாலும் எங்களைப்போன்றவர்கள் வேலை பெறமுடியாது என்ற உன்மையை உணர்த்திய தமிழக அரசுக்கு எங்களின் கோடானு கோடி நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. என்ன கொடுமை...... சரவணன் சார் நிச்சயமாக வரும் எம்.எல.ஏ தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்டுவோம்.......

      Delete
  10. மகாகனம் பொருந்திய தமிழக அரசுக்கு
    வெற்றி பெற்றும் தோல்வியடைந்த(TETல்) பல பேர்களில் ஒருவனின் தாழ்மையான வேண்டுகோள். “15 அல்லது 20 வருடங்களுக்கு முன் +2 முடித்து ஆசிரியர் பட்ட படிப்போ அல்லது பட்டயப் படிப்போ முடித்தவர்களின் பட்டம் (அ) பட்டயம் இனி செல்லாது என உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் நாங்கள் முட்டாள்தனமாக, மீண்டும் TETற்கு தயார்செய்து, மீண்டும் தேர்வு எழுதி, மீண்டும் தாங்கள் நிர்ணயம் செய்த மதிப்பெண்ணை பெற்று மீண்டும் ஆசிரியர் பணிகிடைக்கும் என காத்திருந்து, மீண்டும் “you are not selected” என்ற Result ஐ Netல் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி வெந்து சாவதை விட, தாங்கள் இவ்வாறு அறிவித்தால் நாங்களெல்லாம் பட்டத்தை (அ) பட்டயத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு நமக்கு கிட்டியது இதுதான் என கிடைத்த பிழைப்பை பார்க்க சென்றுவிடுவோம். ஆகவே தாங்கள் எங்களின் இந்த நியமான கோரிக்கையை நிறைவேற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம்மை போன்றவர்களால் என்ன செய்ய இயலும். இது ஒரு நுதனமான கொலை.

      Delete
  11. 3rd list
    3rd list
    3rd list

    11 மாநகராட்சி & நகராட்சி vacancy list varum .


    ADTW வில் இன்னும் SGT&BT transfer counselling நடக்கவில்லை.


    ADTW
    SGT&BT transfer counselling நடந்த பிறகு BT க்கு 700 vacant kalvi maniya korikai யில் சொன்னது வரும்.


    நம்புவோம் kumaraguru நண்பா.

    ReplyDelete
    Replies
    1. ADTW ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் எப்போது வெளியாகும்.

      Delete

    2. இந்த அரசு ஆதிதிராவிட ஆசிரியர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. அரசே தாழ்த்தப்பட்டவர்களை ஏன் பழி தீர்க்கிறாய்.

      Delete
  12. local body election on Sep 18... so i dont think we will be getting appointment before that.... we may have to wait till the result is out and election code is revoked.......

    ReplyDelete
  13. எங்களின் ஏமாற்றமும் கோபமும் தற்பொழுது புதைக்கப்பட்டுள்ளது.விரைவில் வெளிப்படுத்துவோம்...............எப்படி ? Wait and See............................................................

    ReplyDelete
  14. நமக்கு கிட்டியது இதுதான் என கிடைத்த பிழைப்பை பார்க்க சென்றுவிடுவோம் இது ஈனத்தனமான பேச்சு.தயவு செய்து இப்படி பேசாதீர்.......நம் ஏமாற்றமும் கோபமும் தற்பொழுது புதைக்கப்பட்டுள்ளது.விரைவில் வெளிப்படுத்துவோம்...............எப்படி ? Wait and See...........................................................

    ReplyDelete
  15. Sir my 12th% 86 dted% 87 tetmark 92 but am not selected because am Bc by saranya

    ReplyDelete
    Replies
    1. 88% in +2
      81% in D.T.Ed
      100 in TET but not selected

      Delete
    2. Weightage 73.44, tet mark 103, bc not selected brothers and sisters manasu rompa kastama irrukku..

      Delete
  16. Sir my 12th% 86 dted% 87 tetmark 92 but am not selected because am Bc by saranya

    ReplyDelete
  17. நம் உரிமையும் ,வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுள்ளது.நமக்கு கிட்டியது இதுதான் என கிடைத்த பிழைப்பை பார்க்க சென்றுவிடுவோம் இது ஈனத்தனமான பேச்சு.தயவு செய்து இப்படி பேசாதீர்.......நம் ஏமாற்றமும் கோபமும் தற்பொழுது புதைக்கப்பட்டுள்ளது.விரைவில் வெளிப்படுத்துவோம்...............எப்படி ? Wait and See...........................................................

    ReplyDelete
  18. PG KU Second List irukkumaa .. therinjavanga Sollunga...

    ReplyDelete
  19. PG KU Second List irukkumaa .. therinjavanga Sollunga...

    ReplyDelete
  20. Padasalaiyil mattumae job kidaikathavarkalin comment athigamaga kanapadukirathu.....
    Coz????

    ReplyDelete
  21. PAPER 1 ABOVE 71; 72; 73; 74; 75
    வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றும் பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதற்கான தீர்வு காண வரும் ஞாயிறு அன்று நாம் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி எங்கெங்கு மனு கொடுக்கலாம் என திட்டமிட உள்ளோம் ...

    *இது ஜி.ஓ .71 க்கு எதிரானதோ;
    சீனியாரிட்டி முறைக்கு எதிரானதோ;
    உண்ணா விரத போராட்ட முறையோ;
    கிடையாது.. .... .....

    திட்டமிட்ட காரியத்திற்கு மட்டும்
    வெற்றி கிட்டும்...

    பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் தொடர்பு கொள்ளலாம். ..

    நாம் வாழ்நாளில் வரவிருக்கும் திங்கட்கிழமை முக்கியமான நாள்.

    நிச்சயம் 2000 கூடுதல் வேகன்சி பெற முடியும். .
    இந்த ஆண்டே பணி வாய்ப்பை பெற முடியும். .

    "முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
    தெய்வத்தால் ஆகா தெனினும்"

    தொடர்புக்கு. .
    கருப்புசாமி:7200670046

    சத்திய மூர்த்தி 95433 91234.
    நன்றி

    ReplyDelete
  22. Saravanan kuriyathu 100% unmai
    Eppothu thiruthum arasu

    ReplyDelete
  23. Hey in jaya news they said abt apmnt in amma s hand at 3 pm

    ReplyDelete
  24. above 70 vangina namakellam posting i serthu vachchi election timela next tet yoda 2013-2014 aam varuda posting yena ariviththu poduvaargal.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive